பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கடித இலக்கியம்

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே….எப்படி மதிக்கும்…?…எல்லாம் முடிந்த பின்னர்…என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்… பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே… அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்

கவிஞர். தாமரை அவர்களின் பதில்.

vanakkam adv mani avaragale,

  Sorry that I’ve to reply in english as i don have tamil font .  I keep getting a lot of cals from all over the world as a response to my speech .  T;hough i am not an orator, i spoke bec , as you said, that is the only thing we can do now. Your letter explains perfectly the feeling of an ordinary tamilian .  

 Lets hope for a good news.   Til then let us do whatever we can , to eradicate congress from tamil soil. 

  Nanri thozhar.

anbudan thamarai

எப்போது விடியும்…?

அன்புள்ள தோழர் தாமரை அவர்களுக்கு…வணக்கம்.
திரைத்துறையினர் நடத்திய தொடர் முழக்க நிகழ்வில் உணர்வு மிகுந்த தங்களது உரையினை இணையத்தளம் மூலமாக கேட்டேன்..மிகத் தெளிவும், உணர்வும் நிரம்பிய தங்களது பேச்சில் நம் இன உணர்வு பொங்கிப் பாய்ந்தது. நடக்கும் அவலத்தை கேட்பார் யாருமின்றி அழியும் நம் இனத்தின் அழிவை, வலியை மிக அழகாக.நேர்த்தியாக,துணிவாக பதிவு செய்துள்ளீர்கள். பிற மொழி கலப்பின்றி நம் மொழியின் ஊடாகவே நவீன இசையின் அனைத்து உச்சங்களையும் உங்கள் பாடல் வரிகளால் தொட்டு விட்ட தாங்கள் இப்போது நம் இன அழிவினை எதிர்க்கும் ஆயுதமாக உருவாகி உள்ளீர்கள்.. வலி மிகுந்த நேரத்திலும் தங்கள் பணி ஆறுதல் தருகின்றது.
தாங்கள் சொன்னது போலவே நடக்கும் அவலங்களை கண்டு எதுவும் செய்ய இயலாத, முத்துக்குமார் போல சாகவும் துணிவின்றி தினந்தோறும் நல்ல செய்தி ஏதேனும் வராதா என அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன். தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடுகிறேன்.யார் ஈழத்திற்காக போராட்டம் நடத்தினாலும் வலிய சென்று கலந்துக் கொண்டு கத்தி தீர்க்கிறேன். இரவில் திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாக இணையத் தளங்களை மேய்கிறேன். அலை அலையாய் பாய்ந்து வரும் வதந்திகளில் மனதை இழந்து கலங்கி அழுகிறேன்.என்னருகே தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனும்..ஈழத்தில் இறந்துக்கிடக்கும் மகனும் வெவ்வேறல்ல என்று உணர்ந்து கசிகிறேன். உற்றார், உறவினர், கூட பணிபுரிபவர் என அனைவராலும் என் அலைகழிப்பும், பதைபதைப்பும் வேடிக்கையாகவும் ,விசித்திரமாகவும் பார்க்கப் படும் நிலையில்…உணர்வுள்ள தோழர்களை தேடிப்பிடித்து கவலையும், கலக்கமும் நிறைந்த குரலில் யுத்தக் கள செய்திகளை பகிர்ந்துல் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் நிலை.
இரவெல்லாம் தூக்கமின்றி சிவந்து கிடக்கின்றன..பிழைப்பிற்காக நீதிமன்றம் செல்ல வேண்டி நேர்ந்தாலும் உதடுகள் ஒட்டிக் கொண்டு பேச்சு வர மறுக்கிறது..கனத்துப் போன இதயத்துடன் நடக்கவே சிரமமாக உள்ளது..யாரிடமும் பேச விருப்பமற்று தலையை குனிந்தவாறே கடந்து விடுகிறேன். எதிலும் விருப்பமற்று மனம் மரத்துப் போய் வருகிறது. எதையாவது சுவையாக சாப்பிட்டாலோ. நிம்மதியாக கண் மூடி உறங்கினாலோ, கேளிக்கை,சினிமா என ஈடுபட்டாலோ… குற்ற உணர்ச்சியால் உடைந்துப் போய் விடுகிறேன்
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் சகோதர, சகோதரிகளை, குழந்தைகளை, என் போராளிகளை காப்ப்பாற்ற இயலவில்லை.இந்த உணர்ச்சி….என்னுள் குற்ற உணர்ச்சியாய் பதிந்து என்னை நிம்மதியற்றவனாக அலை கழிக்க வைக்கிறது. என்னால் எதையும் இந்த குற்ற உணர்ச்சியை தவிர்த்து விட்டு செய்ய இயலவில்லை. வழக்கறிஞராக உள்ள நான் நீதிமன்றங்களில் என் இன அழிவின் வலியை சுமந்து பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன்.
இருந்த போதும் நான் போராடாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே எனக்குள் இருக்கும் வலி மிகுந்த குற்ற உணர்ச்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் போராடி வருகிறேன். அதற்கு தங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், உரைவீச்சுகளும் உதவுகின்றன.
நன்றி.
இந்த இனத்தில் இறுதியாய் உணர்வுள்ள ஒருவன் இருக்கும் வரை கத்தி, கதறி தீர்ப்போம்..
நமக்கு நேர்ந்த அரசியல் துரோகங்களை, வலிகளை நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்போம்.
வரலாற்றின் எந்த பக்கங்களிலும் பார்த்தாலும் கிடைக்காத அறம் நிறைந்த மாவீரர் பிரபாகரன் நம் இனத்தின் தலைவராக இருப்பதை பெருமையாக நம் பிள்ளைகளிடம் கதை கதையாக சொல்லிக் கொடுப்போம்.
அடுத்த தலைமுறையாவது ஏமாறாமல், கையறு நிலைக்கு சிக்காமல், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
எப்போது விடியும்…?
விடிந்தாலும்..விடியலை தரிசிக்க விழிகள் இருக்குமா…?
விழிகள் இருந்தாலும்…..விழிகளுக்கு உயிர் இருக்குமா..?
பதில்களில்லா கேள்விகளுடன்
மணி.செந்தில்
www.manisenthil.com

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…

என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு….

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி…

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது…..

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை…

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்….துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்…ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது…

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்…

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது…

ஒரு மழை பொழியும் நாளில்….
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்……

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்…

மிகுந்த மகிழ்ச்சியோடு….
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்

எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு…

என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு….

வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி…

உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது…..

என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன…இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை…

உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்….துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்…ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது…

நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்…

ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.

இன்னும் நிறைய இருக்கிறது…

ஒரு மழை பொழியும் நாளில்….
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்……

முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்…

மிகுந்த மகிழ்ச்சியோடு….
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்

Page 2 of 2

Powered by WordPress & Theme by Anders Norén