பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: மே 2008 Page 1 of 2

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…

மே 18…

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு…இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்….அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்…

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..

எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…

மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் …நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…

மே 18…

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு…இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்….அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்…

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..

எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…

மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் …நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”

– டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…

நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”

– டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…

நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

பாரதி-இந்துத்வா வெறியரா..?


தோழர்களே…

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்…

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்……..

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி…..

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே……

என்ன காரணம்…?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்…..அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா…அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்…..அது பாரதி வாழ்ந்த காலம்….

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது….

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு …..அத்தனை இடைஞ்சல்கள்…?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்….

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே…?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே…?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்…..கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ….

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்…?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் …பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா…?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது…

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்…..

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்…..

பாரதி-இந்துத்வா வெறியரா..?


தோழர்களே…

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்…

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்……..

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி…..

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே……

என்ன காரணம்…?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்…..அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா…அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்…..அது பாரதி வாழ்ந்த காலம்….

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது….

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு …..அத்தனை இடைஞ்சல்கள்…?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்….

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே…?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே…?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்…..கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ….

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்…?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் …பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா…?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது…

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்…..

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்…..

நினைவின் சருகில்…

காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது…..

காலம் நம்மை கடப்பதும்…காலத்தை நாம் கடப்பதுமாய்…நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது…..

ஏதோ ஒரு நள்ளிரவில் ….தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்….கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க…பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த …அவளைக் கண்டேன்…

அவளா…? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது…இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்…….அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்….

ஆம்…அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்….இதயத் துடிப்பு அதிகரித்தது…..காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது……

மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்…பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்….

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது…..? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து…..முச்சிறைத்து கிடந்தேனோ……அந்த கைகள் தான் …அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன…..

பேருந்து புறப்படுகிறது….அவள் அங்கேயே நிற்கிறாள்..

இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்…வலிக்காமல் வாழ்ந்திருப்போமே….

பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது….இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன…

வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு…விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்….ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..

ஆம்….அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்…….இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது….முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது…….

கொஞ்சம் நகர்றீங்களா…? ……

கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது…..என் எதிரே இருந்து நகர்ந்து ….சுவர் ஓரமாய் …படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது……

அனைத்தையும்….வியப்பாகவும்…குதுகாலமாகவும்…ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்…ப்ளஸ் 2 படிக்கிற காலம்….

நம் அபத்தமான…வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை….காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்….

மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்…ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்….கவிதை..இலக்கிய முயற்சிகள்…எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்…பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்…கோரமும்….அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது….சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்….மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்….தூண்டும் சாகசமும் அற்புதமானவை…..இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்……
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ……அந்த பருவத்தில் தான்…..

என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது…காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்….பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்…..செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்…

இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்…..பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு…..இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்…அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்….சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து…சிதறடிக்கும்….. இருந்தும் தொடர்ந்து மோதுவாள்…… ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்……..

தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்….

நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்….உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது …சே …நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்…..

என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்….சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்…அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன…..இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு……

(தொடரும்….)

நினைவின் சருகில்…

காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது…..

காலம் நம்மை கடப்பதும்…காலத்தை நாம் கடப்பதுமாய்…நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது…..

ஏதோ ஒரு நள்ளிரவில் ….தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்….கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க…பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த …அவளைக் கண்டேன்…

அவளா…? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது…இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்…….அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்….

ஆம்…அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்….இதயத் துடிப்பு அதிகரித்தது…..காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது……

மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்…பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்….

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது…..? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து…..முச்சிறைத்து கிடந்தேனோ……அந்த கைகள் தான் …அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன…..

பேருந்து புறப்படுகிறது….அவள் அங்கேயே நிற்கிறாள்..

இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்…வலிக்காமல் வாழ்ந்திருப்போமே….

பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது….இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன…

வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு…விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்….ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..

ஆம்….அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்…….இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது….முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது…….

கொஞ்சம் நகர்றீங்களா…? ……

கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது…..என் எதிரே இருந்து நகர்ந்து ….சுவர் ஓரமாய் …படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது……

அனைத்தையும்….வியப்பாகவும்…குதுகாலமாகவும்…ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்…ப்ளஸ் 2 படிக்கிற காலம்….

நம் அபத்தமான…வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை….காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்….

மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்…ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்….கவிதை..இலக்கிய முயற்சிகள்…எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்…பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்…கோரமும்….அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது….சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்….மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்….தூண்டும் சாகசமும் அற்புதமானவை…..இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்……
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ……அந்த பருவத்தில் தான்…..

என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது…காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்….பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்…..செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்…

இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்…..பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு…..இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்…அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்….சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து…சிதறடிக்கும்….. இருந்தும் தொடர்ந்து மோதுவாள்…… ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்……..

தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்….

நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்….உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது …சே …நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்…..

என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்….சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்…அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன…..இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு……

(தொடரும்….)

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி….

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்…

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

அரசின் தவறான கல்விக் கொள்கை…..மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி….

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்…

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…

இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…?

அரசின் தவறான கல்விக் கொள்கை…..மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén