இந்த கட்டுரை கீற்று.காம் இணையத் தளத்தில் அங்குலிமாலா என்பவர் எழுதிய “ஜெயராம் எதிர்ப்பும்,தமிழ் தாக்கரேகளும்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது.

நம் தமிழின தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறி துப்பிய மலையாளத்து பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலி மாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை கழுவ வந்து விடுவார்கள் இந்த கன்றாவிகள் . நல்ல வேளை கார்ல் மார்க்ஸ் உயிருடன் இல்லை. இருந்தால் இந்த வெங்காய தோல்களை கூட்டி..அள்ளிக் கொட்டியிருப்பார்.. குப்பையில்…

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ஈழத்தின் பேரழிவு உலகத் தமிழ் சமூகத்தின் மீது மிகப் பெரிய சோக அவலமாக கவிழ்ந்திருக்கிறது.. உலக வல்லாதிக்க நாடுகளும், இந்தியாவும்..குறிப்பாக மலையாளிகளும் காத்திருந்து..நம் இனத்தினை காவுக் கொடுத்து அழித்தார்கள். நம் கண்ணெதிரே நாடு கட்டி வாழ்ந்த நம்மினம் நாதியற்று கம்பி வேலி சிறைகளுக்குள் வெம்பிக் கிடக்கிறது. உயிரை காத்துக் கொள்ள உறவை தேடி வந்த மீதி சனம் அகதி முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு போன்ற இடங்களில் சின்னாபின்னப் படுத்தப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழர்கள் மிகப் பெரிய உளவியல் போருக்கு மத்தியில் கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களுக்கு பிறகும் மீள் எழுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளோடு தமிழினம் இன்று நின்றுக் கொண்டிருக்கிறது. தாயக தமிழர்களை விட இனமான உணர்விலும், வீரத்திலும், தொன்ம இனம் வழி வந்த அறத்திலும் நின்ற ஈழத் தமிழர்களே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்..இங்கோ ஏற்கனவே மார்வாடிகளும்..சேட்டுகளும்..மலையாள சேட்டன்களும் தமிழகத்தினை தொழில் ரீதியாகவும் , வாழ்வியல் ரீதியாகவும் ஆக்டோபஸ் விழுங்குவது போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் வீதிகளில் தமிழுக்கு இடம் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை. சமூக வாழ்வியலில் தமிழ் இல்லை. பேச்சிலோ,எழுத்திலோ தமிழ் இல்லை. இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை. சென்னை நகரம் மார்வாடிக்களின் கைகளிலும், ஆந்திர ,மலையாளிகளின் கைகளிலும் சென்றுக் கொண்டே இருக்கிறது. நடைபாதைகளில் நாதியற்று கிடக்கிறான் விவசாயத்தினை கொன்று..கிராமத்தினை விட்டுப் பட்டணம் பிழைக்கப் போன தமிழன்.

அதனால் தான் தன்னைக் காத்துக்கொள்ள..தன் பண்பாட்டை காத்துக் கொள்ள தமிழ் தேசிய அமைப்புக்கள் செயல்பட துவங்கி உள்ளன. ஜெயராம் வீடு தாக்கப்பட்டது வன்முறை என்றால்..அதை தாண்டிய வன்முறை மலையாள ஜெயராம் உதிர்த்த சொற்கள்..பொருட்கள் மீதான வன்முறையின் தாக்கத்தினை விட..கருத்துக்கள் மீதும்..ஓட்டு மொத்த இனத்தின் அடிப்படை உருவகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை ..அவை சொற்களாக இருந்தாலும் கூட ..அவை மூர்க்கமானவையே..வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக …இயல்பாக..இருக்காதுதான். அதனால் எதையும் எதிர்த்து கேட்காதே..மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட ..கண்டன ஆர்பார்ட்டம், மனித சங்கலி..உண்ணாவிரதம் ஆகியவை செய்.. காறி உமிழப்பட்ட எச்சிலை துடைக்காதே..நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை.. என்று அங்குலி மாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்.

ஜெயராமின் கருப்பின கருத்தியல் அவரின் ஆரிய மனவியலின் சின்னம். ஆரிய புளுகு புராணங்களில் தமிழர்களை அரக்கர்களாகவும் , குரங்குகளாகவும் படைத்த ஆரிய படைப்பு மனம் தான் இன்றளவும் உயிருடன் இருந்து தமிழச்சியை கருத்த எருமை என எகத்தாளம் பேச வைக்கிறது.

தமிழ் தேசியவாதிகளுக்கு கருத்தியல் பலம் இல்லையாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட …இலக்கிய இலக்கண வளமையைக் கொண்டு…மொழியியல்..பண்பாட்டியியல் ..அரசியல் என அனைத்து சமூகவியல் கூறுகளையும் உலகிற்கு கற்பித்த ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு கருத்தியல் பலம் இல்லையென்பது..ஜெயராம் இழிவுப் படுத்திய சொற்களுக்கு நிகரான அரசியல் தன்மைக் கொண்டவை. என்ன செய்வது.. எமக்கு எதிராக உதிர்க்கப்பட்ட சொற்களின் ஊடாக இருந்துதான் எங்களுக்கான கருத்தியல் பலத்தினை நாங்களே உண்டாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது.

இனம் அழியும் போது கூட ..எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாத..இயலாத அச்ச மன நிலையை அரசு இயந்திரங்கள் மிகச் சரியாக ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மத்திய அரசின் உயர் பதவிகளில்..உளவுத் துறைகளின் உச்சப் பதவிகளில் இன்று மலையாளிகளே இருக்கின்றார்கள். முல்லை பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் நமக்கு மிகப்பெரிய எதிரிகளாக மலையாளிகள் இருக்கின்றார்கள். வேறு எந்த இனத்தினைக் காட்டிலும் நம் ஈழ இனத்தின் ரத்தம் மலையாளிகளின் கரங்களில் தான் படிந்திருக்கிறது.ஜெயராமின் சொல்லாடல்களுக்குள் எங்களை ஈழப் போரில் வீழ்த்திக் காட்டிய மலையாள இனத் திமிர் ஒளிந்திருக்கிறது. மலையாளப்பார்ப்பானை நேரடியாக ஆதரிக்க கூச்சப்பட்டுக் கொண்டு “ சும்மா இருந்தவன அவன் காறி துப்புனது தப்புதான்..ஆனா இவன் திருப்பி அடிச்சது ரொம்ப ரொம்ப தப்பு” என்று கருணாநிதி பாணியில் அங்குலி மாலா முரசொலித்திருக்கிறார்.

பிரச்சனை இவர்களுக்கு என்னவென்றால் ..,மலையாளத்தான் திட்டியது அல்ல.. தமிழன் தட்டிக் கேட்டதுதான். இந்த லட்சணத்தில் மலையாளத்தானுக்கு ஒரு கையில் குடை பிடித்துக் கொண்டு மறு கரத்தால் உழைத்து சோர்ந்த கரங்களோடு கைக் கோர்ப்பார்களாம் இவர்கள்.

நம் இனம் அழியும் போது நாம் அசாதாரணமாக கடைப்பிடித்த மவுனம் தான் இந்த மலையாளப் பார்ப்பான் ஜெயராமின் வாய்க் கொழுப்பிற்கு காரணம். ஜெயராமின் கொழுப்பு மிகுந்த வார்த்தைகளை தமிழன் வழமைப் போல மவுனமாக கடந்திருந்தால் இந்த அங்குலி மாலாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தட்டிக் கேட்கிறானே என்ற அச்சமும் தவிப்பும் அங்குலிமாலாக்களை வார்த்தைகளை மாற்றிப் போட்டு வித்தை காட்ட வைக்கின்றன. கேட்டால் வன்முறையாம். இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் இந்த அகிம்சை (?) மார்க்சியவாதி சொல்கிறார். இந்த கொழுப்பினை தட்டிக் கேட்டால் அங்குலி மாலா நாம் தமிழர் இயக்கத்தினையும் ..சிவ சேனாவையும் ஒப்பிடுகிறார். நாம் வெகு தீவிரமாக எதிர்க்கக் கூடிய மதவாத அரசியலின் மராட்டிய முகமான சிவசேனாவிற்கு கூட மராட்டிய மக்களினத்தின் வரலாறு குறித்தும்..பண்பாடு குறித்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அங்குலி மாலா போன்ற முற்போக்கு முகமுடிகளுக்கு எவ்வித புரிதலும்..அறிதலும் இல்லை. தமிழ்ப் படங்கள் மலையாளப் பெண்களை இழிவுப்படுத்துகின்றன என அங்குலிமாலா வெகுவாக வருந்துகிறார். அதனால்தான் ஜெயராமும் நம்மினப் பெண்களை இழிவுப் படுத்த உரிமைப்படைத்தவராகிறார் என சொல்ல வருகிறார் அங்குலிமாலா.. இந்தியா முழுவதும் தேசிய இனங்களின் தன்னுரிமை குறித்தான சிந்தனை செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது.அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மொழியையும், பண்பாட்டினையும் காக்க போராடத் துவங்கியுள்ளார்கள். அதனுடைய ஒரு வடிவம் தான் ஜெயராம் வீட்டு மீதான தாக்குதல்.

தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வந்து எங்களோடு சகோதரர்களாக அமைதியாக வாழலாம். ஆனால் எங்களை இழிவுப் படுத்தவும் ,சிறுமைப்படுத்தவும் எவருக்கும் உரிமை இல்லை. சர்வதேசியம் பேசியவர்களும்..பொதுவுடைமை உலகை உருவாக்க கிளம்பியவர்களும் தான் சேர்ந்துக் கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இனி எங்களுக்கான அரசியலை..எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

நாங்கள் வீழ்ந்தவர்கள். தோற்றவர்கள். எங்கள் காயத்தின் ரத்தம் கூட இன்னும் உலரவில்லை. எங்களிடம் அறம் பேசும் அங்குலிமாலாக்கள் முதலில் மலையாளிகளிடம் போய் பேசி கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரட்டும். எதற்கெடுத்தாலும் எம் தந்தை பெரியாரை இழுப்பதை இந்த மார்க்சியவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு தமிழர்களுக்கே ! என்று தனித்தமிழ் நாடு கேட்ட தந்தை பெரியார் இன்று உயிருடன் இருந்தால்..திராவிடத்தின் பேரால் மலையாள பார்ப்பனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டு..தமிழனை தூக்கி சிறைக்குள் போடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளை தடி கொண்டு அடிப்பார்.

மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை பரப்புகிறது. அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. அதனால் தான் ஜெயராமை வீட்டினை தாக்கியதாக சொல்லப்படும் நாம் தமிழர் இயக்க தோழர்களின் கைதுகளுக்குப் பிறகும்..எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை எப்படியாவது கைது செய்து விட அரசு துடிக்கிறது. ஒரு இயக்கத்தினரின் செயல்களுக்காக அதன் தலைமையும் கைது செய்யப்பட வேண்டுமென்றால்..மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பினில் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் யார்..?

திரைப்படங்களில் பெண்களின் நிலை குறித்த பார்வையை மலையாளத்தானுக்கு ஆதரவாக சீமான் ,தங்கருக்கு எதிரான முரணாக முன் நிறுத்துவது அபத்தம். ஒட்டு மொத்த இனத்திற்கான இன மானக் குரலுக்கு எதிராய்..உள் சமூக முரண்களை பெரிதாக்கிக் காட்டும் போக்கு இனத்தின் மேன்மையை இன்னும் வீழ்ச்சிக்கே தள்ளும்.

என் இனம் வீழ்ந்ததும், அழிந்ததும் எனக்கு வலிக்கிறது. எம் தாய்மார்களைப் பற்றி பேசினால் எனக்கு சுடுகிறது. என் நிலமும்,வாழ்வும், என் மீதான அதிகாரம் செலுத்தும் உரிமையும் மலையாளத்தான் கரங்களில் சிக்கும் போது நான் பாதிக்கப் படுகிறேன். எம் இனத்தினை எள்ளலுக்கும்..கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்.

வன்முறையை தனது திமிரால்..விதைத்தவன் அந்த மலையாளத்து பார்ப்பான் ஜெயராம்தான். மலையாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. முடிந்தால் அதை எதிர்த்துக் கேளுங்கள்.நாங்கள் வெறும் வன்முறையாளர்கள் அல்ல என்பதை முத்துக்குமாரர்களாக, திலீபன்களாக நிருபித்து இருக்கிறோம்..ஏற்கனவே.. வரலாற்றில்.கையில் விமானம் இருந்தும் பொது மக்களை தாக்காமல் ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கிய தமிழர்களின் அறம் உலகம் அறிந்தது. அங்குலி மாலாக்கள் அறியாதது ஏனோ.?