மழை வருவதும்..
வராததும்
அவரவர் மன நிலையை
பொருத்தது.

பல நேரங்களில்
மழை யாரோ
ஒருவருக்கு
மட்டும் பெய்து
விட்டு போவதும்..

ஊரே நனைகையில்
ஒருவருக்கு
மட்டும்
பொய்ப்பதும்
நேசிப்பில் மட்டுமே
சாத்தியம்.

மழையில்
இசையை
உணருபவனும்..
இசையில்
மழையை
உணருபவனும்..

நிச்சயம் வெவ்வாறனவர்களே..

ஒரு இளஞ்சூட்டு
தேநீரோடு
மழை விடை பெறலாம்.

அந்த தேநீரின்
கதகதப்பிற்காகவே
இன்னொரு மழையும்
பெய்யலாம்.

தேநீரை காதலியாக
பருகுபவர்களும்..
காதலியை ஒரு
இளஞ்சூட்டு தேநீராக
ரசிப்பவர்களும்..

பாக்கியவான்கள்.

உங்களில் யார் பாக்கியவான்கள்…?

-மணி செந்தில்.