11987113_10208016904569164_8236167518369065881_n

சொற்கள் குவிக்கப்பட்டிருந்த

அந்த நிலா முற்றத்தில்

நான் தனித்திருந்தேன்

எனக்கு ஆக பிடித்தவனுக்காக..

விழி இழந்தவனின்

விரல் நுனி போல

தேர்ந்த சொற்களின்

பதம் பார்த்து

நினைவின்

அடர்பாசி மாலை

ஒன்றினை சூட்ட

ஒளி உமிழும் கரங்களோடு

காத்திருந்தேன். .

அடுக்கடுக்காய் தடுக்கிற

நினைவின் மடிப்புகளில்

சதா கலைந்துக்

கொண்டே இருந்தேன்

ஒரு வித சங்கடத்தோடு..

என்னை கண்டு

வாரி அணைக்கிற

அவனது புன்னகையும்..

தோள் தழுவி பூரிக்கின்ற

அவனது ஈர விழி அசைவுகளும்..

பழகிய அடவுகளாய்

என் மெளனச் சருகின்

விலா முறிய

என்னை சுற்றி

நடனமிடும் போது…

நான் எனக்குள்ளாக

சொல்லிக் கொண்டேன்..

பாக்கியா…

சொற்களின் சேகரத்தில்..

காலங்களின் கலையா மடிப்புகளில்..

அடர் வனத்தில் தனித்தலையும்

காற்றின் மகரந்த வாசனைகளில்…

விடிப்பொழுதில்

நதிக்கரையில் ஈர மணலில்

படுத்திருக்கும்

நிலாக்கால வெண் சுடர்களில்..

இப்படி

எதிலும் மிஞ்சியிருக்கும்

உங்களுக்கென

தனித்திருக்கும்

எனது அன்பும் ,தழுவல்களும்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.