நாங்கள் ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்.

உண்மையாகவே
எங்கள் ஆத்தா
அந்த
நிலாவில் தான்
வடை சுட்டார்..

எப்போதும் வெளிச்சம்
இருக்கிற நிலாவில்
நாங்கள் பகலிரவு
தெரியாமல்
வளர்ந்தோம்.

பிணைக்கப்பட்ட
விரல்களோடும்..
எங்களை சுமந்த
7 தோள்களில் தான்
நாங்கள் முதற்
கனவு கண்டோம்.

நம்ப மாட்டீர்கள்.

அந்த கனவிலும்
நிலா வந்தது.
..

நம்ப மாட்டீர்கள்.
நாங்கள் கூட
நம்ப முடியாமல்
தவிக்கிறோம்..

ஆம்.
நாங்கள்
ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்

————–

அன்பின் சூட்டினால்..
நினைவுகளை கிளறிய
Jayaprakash Raj க்கு.