அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை,
ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.

இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன்.

ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்:

மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல்.
அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று உறுதியாக நம்புகிறேன்.

அவரது நினைவுகளைக் கொண்டு அடுக்கிருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான இசைப் போல நம்மீது படர்ந்து சூள்கிறது. இலக்கிய உலகில் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் பேராளுமைகளை அவர்களின் எளிமையான குணாதியங்களை பதிவு செய்து நம் பக்கத்து வீட்டு நண்பர் போல, நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். இதனால் அந்த மகத்தான மனிதர்களின் எழுத்தின் மீதுள்ள பற்று இன்னும் கூடுகிறது. அவர்களின் படைப்புகளைத் திரும்ப வாசிக்க தூண்டுகிறது.

ஓர் அழகிய சொல்லோவிய உதாரணம்

” பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர் தான். காற்றாக மாறினாலும், ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது..

ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.”

அரசியல் கட்டுரைகள்:

“Ethnic nationalism ” என்ற பூர்வக்குடி மக்களின் தேசிய அரசியல் போராட்டங்கள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் உதிரம் வடியும் தொடர் வரலாறு. (முரண்).

முடிவுப்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வின்போது, ஒரு பார்வையாளராக / பங்கு கொண்டவராக இருந்துக் கொண்டு அவருக்கே உண்டான தனித்துவமான எழுத்து நடையில் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். இதற்கு அண்ணனின் செவ்விந்திய பூர்வக்குடிகளின் பாடல் மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
“ஆம்..
நாங்கள் காட்டுமிராண்டிகள்தான்
ஆனால் காடு
எங்களுடையது”

ஆம். நம் தமிழ்தேசிய அரசியலை ஒற்றைக் கட்டுரையில் உருவகித்து விட்டார்.

பொதுக்கட்டுரைகள்:

அண்ணன் , அவரின் பல ரசனைகளை கருப்பொருளாக்கி அதன் கீழ் நினைவலைகளை பதிவு செய்துள்ளார். ஆனால் ஒரு (perfect contextual foundation) , இதற்கான அடி நாதமாய் விளங்குவது அவருக்கு
வாழ்தலில் மீதுள்ள பற்றுதான் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். அதுவே அவருக்கே உரித்தான அவரின் அரசியல் கருத்தாக்கம். இதை ஒவ்வொரு வாசகருக்கும் தன் எழுத்தின் மூலமாக கடத்திவிட எத்தனிக்கிறார். அதில் வெற்றியும் பெருகிறார்.

எனக்கு வாழ்தலுக்கான பற்றுக் குறையும் நேரத்தில் அண்ணனின் எழுத்துக்கள் அரணாய் அரவணைத்து செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கட்சி தளத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் இலக்கியத்திற்கு ஒரு தொடர் வாசகியாக என்னை மாற்றிய இந்த படைப்பைப் போல், நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். அதை நானும் கொண்டாடவேண்டும்.

உங்கள் படைப்பைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்ட அண்ணனுக்கு நன்றிகள் பல.

– சுனந்தா தாமரைச்செல்வன்.

இந்த ஆண்டு நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என் அன்பு அண்ணன் Mani Senthil எழுதிய செவ்விந்தியனின் நடனம்.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது கையில் எடுத்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க வைப்பது. அது என் அண்ணனுக்கு இயல்பாகவே வாய்க்கப்பெற்றது.

தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு உணர்வை தூண்டுகிறது.

குறிப்பாக ஒரு இரவில் எல்லையற்ற விடியல்களில் இளையராஜாவின் சோலை பசுங்கிளியே பாடல் எங்கள் மூவரையும் ஏதோ ஒரு திசையில் இழுத்துக்கொண்டு சென்றதாக அண்ணன் எழுதியிருப்பார் ஆனால் அவருடைய எழுத்தாளுமையால் அங்கே நாளாவதாக நாமும் ஒரு பார்வையாளனாக இடம்பிடித்திருந்தோம்.

செவ்விந்தியனின் நடனத்தில் ஒரு ஆசானாக நமது தோள்களில் கைபோட்டு பல புத்தகங்களையும் பல எழுத்தாளர்களையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டே போகிறார். மோக முள் குறித்து ஏற்க்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதை படித்தே தீரவேண்டும் என்ற வெறியை. அண்ணன் மணி செந்தில் ஏற்படுத்திவிட்டார்.

அன்பும் நேசிப்பும் அண்ணா.

-கார்த்திக் கணேசன்.
யமுனாவை நானும் தேடி இருக்கேன்,
தங்கை அனிதாவின் கட்டுரையில் கண்ணீர்கள் நிறைய , 
நிறைய அழகை , நிறைய கேள்விகள் , பெரும் மகிழ்ச்சிகள், நிறைய இருக்கிறது முழுமையாக பின்பு எழுதுகிறேன் .. இபோதைக்கு உன் எழுத்திற்கு அன்பு முத்தங்கள் அண்ணா
நம் கும்பகோண நகரத்தை வைத்து ஒரு நாவல் எழுதுங்கள் தி.ஜாவை போல…..
#LOVE _YOU_ ANNA மனைதை உருக்கும் எழுத்து
நிறைய பணிகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும் நேரில் பார்த்தீர்கள் , ஒரு முழுமையான கட்டுரை விரைவில் எழுதுகிறேன்

அன்பின் ஆழத்திலிருந்து
– தமிழ் சிலம்பரசன்