சமீபத்தில் காவிரி தொலைக்காட்சியில் பேட்டியாளர் மதன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதது குறித்து சுபவீ இன்று விளக்கம் என்ற பெயரில் வழக்கம் போல் வழ வழா கொழ கொழா பதிவு ஒன்றினை இட்டிருக்கிறார் . வழுக்கி விழந்ததை கூட இப்படி எண்ணை தடவி காட்டுவதற்கு சுப‌.வீயால் தான் முடியும்.

அது போகட்டும். பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுபவீ தடுமாறியது அவரது அரசியல் தோல்வி.
அத்திவரதரை பார்க்க ஏன் திமுக தலைவர்களின் குடும்பங்கள் படையெடுத்தார்கள் என்கிற கேள்விக்கும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் திமுக ஆதரித்த பித்தலாட்டத்தை குறித்த கேள்விக்கும் சுப வீயால் பதில் சொல்ல முடியவில்லை.

அங்கே பதில் சொல்லாமல் விழித்து விட்டு.. சமாளிபிகேஷன் செய்து ஒரு பதிவை போட்டிருப்பது என்பது ஆகப்பெரும் காமெடி.

தான் தொழுது கொண்டிருக்கிற… தனக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிற திமுகவின் தலைமை கொஞ்சம் கூட வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்ட கேள்விக்கெல்லாம்.. சம்பந்தமே இல்லாமல்.. பெரியார் ,அந்தக்காலம் இந்தக்காலம், என்றெல்லாம் உளறிக்கொட்டி விட்டு.. அதை சமாளிப்பதற்காக.. நான் தோற்றுத்தான் போய்விட்டேன்.. நாம் தமிழர் கட்சியினர் என்னை கிண்டல் செய்கிறார்கள்.. பாளையங்கோட்டையில் ஒருவர் திட்டினார்.. புதுக்கோட்டையில் ஒருவர் தும்மினார் என்றெல்லாம் காமெடி செய்திருப்பது உண்மையில் சுபவீ யைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இதற்கும் அண்ணன் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.

சுபவீ இறந்து போக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோமாம். சுபவீ இறந்துவிட்டார் என்று சொன்னது.. நாங்கள் பார்த்து வியந்த கொள்கைவாதி சுபவீ பிழைப்புக்காக தடம்மாறி புரண்டதை அவரது தற்கொலை என்ற அர்த்தத்தில் இறந்து விட்டார் என்று சொல்கிறோம். அது ஒரு கொள்கை சாவு. லட்சியமும் கொள்கையும் இல்லாத பிழைப்புத் தனத்தையே வாழ்க்கையாக கொண்ட மனிதன் பிணத்திற்கு சமம்.

மற்றபடி திமுக அதிமுக தலைமைகளோடு மோதிக் கொண்டிருக்கிற நாங்கள்.. இந்த லகுட பாண்டிகளின் லாவணியை கேட்பதில்லை.

வடிவேலு ஒரு படத்தில் ஆட்டினை திருடிவிட்டு பஞ்சாயத்தை கலைக்க படாத பாடு படுவது போல..

திமுக செய்கிற பிழைப்புத் தனங்களுக்கு முட்டு கொடுப்பதற்காக பேட்டியாளர் மதன் கேட்கின்ற கேள்விகளுக்கு சுபவீ படாதபாடு பட்டு உருண்டு புரண்டது.. காண சகிக்காத நாம் விரும்பிய ஒரு காலத்து தத்துவ வாதியின் தோல்விக் காட்சி.

மற்றபடி வடிவேல் சொல்வது போலத்தான்..

சூனா பானா இதை இப்படியே மெயிண்டன் பண்ணு. சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது..

மணி செந்தில்.