இளையராஜாவின் பியானோ..
கவிதைகள்
July 23, 2015
http://www.youtube.com/watch?v=pCSvidS2ZQM
எப்போதும்
மின்னிக் கொண்டிருந்த
அந்த நதிக்கரையில்
நட்சத்திரங்கள்
தரை இறங்கி
கிறங்கிக் கிடந்தன..
துடித்துக்
கொண்டிருந்த
நீரைப் போர்த்திக்
கிடந்த நிலவு
கூழாங்கற்களை
தழுவிக் கொண்டது…
ஒரு கவிதை
தன்னைத் தானே
மடல் விரித்து
எழுதத் தொடங்கிய
அக்கணத்தில் தான்,,,
அந்த
பின்னிரவில்…
இளையராஜா
பியானோ
வாசிக்கத்
தொடங்கி
இருந்தார்….
911 total views, 2 views today