Category: அரசியல் Page 11 of 15
மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தங்களுக்கான அரசியல் வெளியை அமைக்க முயல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல்.. தமிழ்த்தேசிய இனம் என்ற சொல்லைக் கூட அரசியல் அரங்கில் பயன்படுத்தாமல் திட்டமிட்டு புறக்கணித்து ..கடந்த 2009 -ல் எமது தாய்நிலம் ஈழம் அழிக்கப்பட்டப் போது திட்டமிட்டு நீளத்துடித்த எம் கரங்களை அரசியல் அதிகாரத்தால் கட்டி, ஏய்க்கின்ற நாடகக் காட்சிகளால் தொடர்ந்து எம்மை ஏமாற்றி.. தொப்புள் கொடி உறவுகள் அங்கே துடிக்க துடிக்க கொல்லப்பட்ட போது ..மரபணு துடித்து ..உணர்வுகள் வெடித்து..உயிரோடு எரிந்து ..உலகத்திற்கே சாட்சிகளாக முத்துக்குமார் போன்ற தியாக மறவர்கள் திகழ்ந்த போது…தனது பிழைப்புவாத அரசியலுக்காக..ஊழல் பெருநாற்றம் எடுத்து நாறுகிற தனது பதவிக்காக எம் இனம் அழிய துணைப் போன இவர்கள்..
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் தேசிய இனவரலாற்றில் தோன்றிய மகத்தான தலைவர்.பிரபாகரன் அவர்களைப் பற்றி இப்போது பேச அழைக்கிறார்கள்..விவாதிக்க விரும்புகிறார்கள்..வெங்காயம்…
காலங்காலமாய் அடிமைப்பட்டு , அடக்கப்பட்டு, இது நாள் வரை திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு, சொந்த மண்ணிலேயே எம் மொழி மறந்து, எமது கலை,பண்பாடு தொலைத்து, வந்தவனை எல்லாம் வரவேற்பு அறையில் அமர வைக்காமல், வீட்டிற்குள் அழைத்துப் போனது மட்டுமில்லாமல், வீட்டினையே வந்தவன் பெயருக்கே மாற்றியளித்து விட்டு..வீதிக்கு வந்ததோடு மட்டுமில்லாமல்..அப்படி நாதியற்று வந்தததையும், வந்தவனை வாழ வைத்தோம் என்று வாய் கூச பெருமைப் பேசி..எம் மண்ணை,கனிமத்தை, அரசியலை,வாழ்வியலை, கொள்ளையடிக்க, எம் நிலத்தை வேரறுக்க, அவன் வாழ நான் சாக அனுமதித்து விக்கித்து வீதியில் நின்ற எமக்கு.. எமது மற்றொரு தாய்நிலத்தில் பிறந்து அடிமை தேசிய இனத்தின் இழிவுப் போக்க போராடிய எம் தலைவர் பிரபாகரன்.. இந்த மண்ணில் குடியேறி.. கொள்ளையடித்து..கொழுப்பேறி..குட
எம் மண், எம் மக்கள், எம் மொழி என பேசி..உயிரற்ற சடலமாய் உருவமற்று கிடக்கிற..எம் மக்களை உசுப்பேற்றி..இன உணர்வு கொள்ளும் பணியை செய்யும் இளைஞர்களை…தமிழ்நாஜிக்கள் என்று தரங்கெட்ட இவர்களது வசவுகள் அழைக்குமானால்…. ஊழலும், சீரழிவும், ஆபாசமும்,வெட்கக்கேடும்,மோசடியு
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் உதிரம் வர வைக்கிற காட்சியாக தொலைக்காட்சிகளில் ஓடியும் ஒருவருக்கும் உறைக்கவில்லை என்றால் இது இனம் அல்ல பிணம். சொந்த தங்கையை அம்மணமாக அடித்து இழுத்துச்செல்கிறான் எதிரி. இங்கே பட்டாசு கொளுத்திக்கொண்டும், புத்தாடை அணிந்துக் கொண்டும், தல படம் பார்த்துக்கொண்டும், டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டும் கும்மாளமாக இருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட தன்மானற்ற ,தரங்கெட்ட இனத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என எண்ணும் போது வெட்கி தலைக்குனிகிறேன்.
எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது அவர்களின் அரசியலை சாகடிக்க. ..முற்போக்காளர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு அருகில் ..நாங்கள் நிற்கிறோம். இந்தியர்கள் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். ஏனெனில் இந்நாடு இந்தியா, தமிழ்நாடு என பிரிந்தே கிடக்கிறது. என்கிறோம். ஏற்கனவே இருந்த தமிழ்த்தேசியர்கள் எம்மை தேர்தல் பாதையில் செல்லும் பிழைப்பாளர்கள் என பிழை பேசுகிறார்கள்.ஏனெனில் தமிழ்த்தேசியம் அவர்களால் வெல்லமுடியாத தேர்தலிலும் வெல்லும்..அதிகாரத்தை அள்ளும்.. என நிற்கிறோம். திராவிடவாதிகள் எங்களை எதிரி என்கிறார்கள்.ஏனெனில் எம் இனத்தின் எதிரிதான் திராவிடவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்கிறார்கள். விமர்சிக்கவே அவர்தான் கற்றுத்தந்தார் என்கிறோம்.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.எம் இனத்திற்கு என்று ஒரு நாடு அடைவதை விட உன்னத அரசியல் உலகில் இல்லை என்கிறோம். விடுதலைப்புலிகளை மற்றவர்கள் ஆதரித்தார்கள். நாங்கள் தரித்தோம். பிரபாகரனை தலைவர் என்றார்கள். நாங்கள் எம் அண்ணன் என்றோம். காங்கிரசை மற்றவர்கள் எதிர்த்தார்கள். நாங்கள் எரித்தோம்…கருணாநிதி சொல்லிதான் கட்சி ஆரம்பித்தார்கள் என்றார்கள்.பின்னர் கட்சி ஆரம்பித்ததே கருணாநிதியை எதிர்க்கத்தான் என்றார்கள். ஜெயலலிதா ஆதரவில் இருக்கிறார்கள் என்றார்கள். ஜெ எதிரி கருணாநிதிக்கு கிடைக்கும் கூட்ட அனுமதி கூட எமக்கில்லை என்ற போது நழுவினார்கள். தாதுமணல் கொள்ளையை ஆதரிக்கிறார்கள் என்று கார்ட்டூன் வரைந்தார்கள். தாதுமணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி நாங்கள் தானே என்று கேட்டால் கார்ட்டூன் வரையும் கரங்களுக்கு கண்கள் இல்லை என்கிறார்கள். இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என அலறினார்கள் . மோடிக்கு பீடி பற்ற வைப்பவர்களை கேட்காமல் யாசின் மாலிக்கை தமிழ் மண்ணிற்கு அழைந்த வந்தவர்களை ஏன் அவதூறுகிறீர்கள் என்று கேட்டால் புத்தகம் போட்டவரில் இருந்து புண்(ஆகும் வரை )ணா (நா)க்கு விற்றவர் வரை மெளனித்தார்களே,,ஒழிய..உண்மையை உரைக்க ,பாராட்ட ஒருவரில்லை. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார்கள் என உறுமுகிறார்கள். இனம் வென்றாக அனைவரை ஒன்றாக்க வேண்டும் என்கிறோம். முரண்களை களையாமல் இணையமுடியாது என இறுமுகிறார்கள். இணைந்தால் முரண் களையும் என முழங்குகிறோம். # விமர்சிக்கப்படுவதிலும்..உற்று நோக்கப்படுவதிவதிலும்..எதிர்க்க