பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 7 of 11

சென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,

                   இந்த முறையும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்போடும், உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கைகளோடும் முடிந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தவறாமல் செல்கிறவனாய் இருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நமது பழைய-புது நண்பர்களை, எழுத்தாளர்களை,அறிவுலக  ஆளுமைகளை ஒரு சேர சந்திப்பதும் ,உரையாடவதும் அடுத்த ஒரு வருட காலத்தில் நாம் இயங்குவதற்கான,வாசிப்பதற்கான, எழுதுவதற்கான உந்துதல்.
   ஒரு இயல்பான வாசகனுக்கு கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை  ஒரு சேர காணுவது உற்சாகம் என்றாலும் 700 கடைகளிலும் நின்று …வந்திருக்கும் புதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்து,தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது வாய்ப்பில்லாத ஒன்றாகவே இந்த புத்தக கண்காட்சியிலும் இருந்தது.  பல முக்கிய புத்தகங்களை வழக்கம் போல நான் இந்த வருடமும் தவற விட்டேன். குறிப்பாக அம்பேத்கார் பவுண்டேஷன் வெளியீடாக வந்திருக்கிற அண்ணல் அம்பேத்கார்  அவர்களின் 37 தொகுதி நூல்கள். பிறகு கடைசி நாளில் என் தம்பி இடும்பாவனம் கார்த்தி மூலமாக வாங்கினேன்.                
                  இத்தனை ஆயிரம் புத்தகங்களுக்கு மத்தியில் நமக்கு தேவையான புத்தகங்களை வாங்குவது என்பது மிகப்பெரிய சவால் .அதே போல ஒவ்வொரு பதிப்பகத்தையும் தேடி நூல்கள் வாங்குவதும் மிகச்சிரமமான காரியமாகவே இருந்தது. காலச்சுவடு பதிப்பகத்திலும், உயிர்மை பதிப்பகத்திலும்,பாரதி புத்தகலாயத்திலும் கூட்டம் அலைமோதியது. வழக்கம் போல விகடன் அரங்கத்திலும் கூட்டம் அலைமோதியது.
                     இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலைவழக்கில் சிக்குண்டு மரணத்தண்டனை வாசியாக அண்ணன் பேரறிவாளனின் உயிர் வலி ஆவணப்படம் கிடைக்கும் எண் 273ஆம் அரங்கத்தில் வந்த பலருக்கும் அம்மா அற்புதம் அவர்களோடு புகைப்படம் எடுப்பதும் முக்கிய பணியாக இருந்தது. சளைக்காமல் அனைவருக்கும் அம்மா பதிலளித்துக் கொண்டிருந்தார்.  அந்த அரங்கத்தில் வந்து நிற்பதையும் ,அம்மாவை காண்பதையுமே முக்கிய பணியாக பலர் கருதியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
                        அன்றைய பிற்பகலில் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அனைத்து படைப்புகளின் தொகுப்பு தொகுதியான பாவேந்தம் மற்றும் தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் என்கிற நூலின் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தேசிய தந்தை அய்யா.பழநெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியரும், ஆய்வறிஞருமான முனைவர் வீ. அரசு, முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் காசி ஆனந்தன்,இயக்குனர் கவுதமன்  மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.  இறுதியாக பேசிய செந்தமிழன் சீமான் உணர்ச்சி பெருக்கில் அமைந்த பல பாரதிதாசன் பாடல்களை தனது கம்பீர குரலில் முழங்கி,நிகழ்கால அரசியலை ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தியது. தனது தம்பிகளோடு பல அரங்கங்களுக்கு சென்ற சீமான்   பல புத்தகங்களை வாங்கிச்சென்றார். அவரோடு வந்த இயக்குனர் பாலாவும் கவனத்தை கவர்ந்தார். சீமானின் பேச்சால் உந்தப்பட்டு உணர்வு வேகத்தில் நின்ற இளைஞன் ஒருவனை நாங்கள் அரங்கம் ஒன்றில் பார்த்தோம். இங்கே ஒரே தமிழ்புத்தகமா ல்ல இருக்கு.ஐ டோன்ட் லைக் தமிழ் என பேசிய அவனது இளம் மனைவியை அப்ப வெளிநாட்டுக்கு போ என்று திட்டிய அவனை பார்த்து சில நம்பிக்கைகள் பிறந்தன. 
                                                  குறைகள் பல இருந்தன. முதலில் அரங்க வரிசை. சீட்டுக் குலுக்கி எடுத்து தேர்ந்தெடுப்பதால்  ஒரே மாதிரியான புத்தகங்களை தேடி வருபவர்கள் முன்னும் பின்னும் அலைய வேண்டி இருந்தது. ஒரே மாதிரியான, வகைப்பாடுகளை உடைய புத்தகங்களை வெளியிடும் பதிப்பக அரங்கங்களை தனித்து பிரித்து வரிசைப்படுத்தினால் வரும் வாசகர்கள் தங்களுக்கான பகுதியில்  நின்று தேடி வாங்க எளிதாக இருக்கும். (எடுத்துக்காட்டாக காலச்சுவடு,உயிர்மை, காவ்யா, உயிரெழுத்து,வம்சி,புலம், கருப்புப்பிரதிகள், யூனிடெட் ரைட்டர்ஸ், தமிழினி ,   எதிர் என  ….) 700 புத்தக அரங்குகளில் தமக்கான புத்தகத்தை கண்டடைவதற்கான சாத்தியங்கள் எளிமையாக இருந்தால் தான் புத்தக விற்பனை இன்னும் களை கட்டும். அதே போல அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலை. அங்கு ஒரு வேளை உணவு அருந்துவதை தவிர்த்தால்..கனமான இரண்டு புத்தகங்களை வாங்கி விடலாம் என்பதாலேயே பலர் பட்டினியாக திரிந்ததையும் காண முடிந்தது. பாபசி கவனத்தில் எடுத்துக் கொள்ள கோருவோம்.
      

             புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சம்..நாம் யாரை வாசித்து வருகிறோமோ ..அவரை நேரடியாக சந்தித்து உரையாடும் அம்சம். அவ்வகையில் இப்புத்தக கண்காட்சியில் பலரை சந்தித்தேன். மிக முக்கியமாக மிகச்சிறந்த ஆய்வாளர் மற்றும் பதிப்பாசிரியர் பேரா.வீ. அரசு அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியை அளித்தது. சிறிது நேரம் பேசும் போது கூட ஒரு பல்கலைக்கழக நூலகத்தில் தேட வேண்டிய செய்திகளை அள்ளித்தருவதில் அரசு ஒரு அரசர்.  அதே போல சாரு,எட்வின் அண்ணா, விஷ்ணுபுரம் சரவணன்,எஸ்.டி.பிரபாகர்,செல்வராஜ் முருகையன் உட்பட பல தோழமைகளை சந்தித்ததும் உற்சாகமாக இருந்தது. எழுத்தாளர் சாருநிவேதிதா இனி தமிழில் நான் எழுதப்போவதில்லை என்பதை நியூஸ் சைரன் இதழில் தெரிவித்துள்ளதை பற்றிக் கேட்டேன். அவரது ஆரம்ப கால படைப்பில் இருந்து தற்போது வரை உள்ள படைப்புகளை பற்றி எனது வாசிப்பனுவத்தை சொன்னேன். குறிப்பாக ராக் இசையை பற்றியும்,மேற்கத்திய இலக்கியங்கள் , மேற்கத்திய பண்பாட்டு குறியீடுகள் குறித்தும் அவரது படைப்புகளில் விரவிக்கிடக்கின்ற தகவல்கள் மிக முக்கியமானவை என்று சொன்னேன். எனக்கு உங்கள் எழுத்துக்களில் ,கருத்துக்களில் உடன்பாடில்லை. ஆனால் உடன்பாடில்லாதது தேவைப்படுகிறது. அப்போதுதான் நாம் எதில் உடன்பட்டிருக்கிறோம் என உணர முடிகிறது என்று நான் சொன்னதற்கு தோழமையாக சிரித்த சாரு…அவர் வரைத்து வைத்திருக்கும் அல்லது நாம் உருவாக்கி வைத்திருக்கும் அவரது பிம்பத்திற்கு எதிராக அக்கணத்தில் இருந்தார்.மதுரை ஆட்கள் தமிழில் நிறைய எழுத வந்து விட்டார்கள். நம்மூர் ஆட்கள் குறைந்தது போல தோணுகிறது என வருத்தப்பட்ட சாரு எங்கள் நாகூர்க்காரர்.

               நண்பன் விஷ்ணுபுரம் சரவணனின் சிறார் நூலான வாத்து ராஜாவை நான் பாரதி புத்தகாலய அரங்கில் கேட்ட போது வெளியே வைத்திருந்தது விற்று விட்டது. உள்ளே இருந்து எடுத்து தருகிறேன் என விற்பனையாளர் சொல்ல எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த தருணத்தில்..என் தோளில் ஒரு கை விழுந்தது. சரவணன்.கூடவே எட்வின் அண்ணா. ஒரு தேநீரோடு தோழமை உரையாடல்.
       தமிழ்நாட்டில் நடைபெறும் மாபெரும் புத்தக கண்காட்சியில் தமிழ் பேசுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். எக்ஸ்கியூஸ்மீ என்கிற சொல் தான் பரவலாக கேட்டுக் கொண்டே இருந்தது. கொஞ்சம் வழி என்று கேட்ட எங்களை வேற்றுக்கிரக வாசிகளை போல பார்த்ததும் நடந்தது. சீமான் அண்ணன்  இது புத்தக கண்காட்சி இல்ல…புக் ஃபேர் என்று வேதனை தொனிக்கும் கிண்டலுடன் தெரிவித்தார்.       
            வழக்கம் போல புத்தகங்கள் என் மேசையின் மீது குவிந்து கிடக்கின்றன. இவற்றை எல்லாம் ஒரு ஆண்டிற்குள் படித்து விட முடியுமா என தெரியவில்லை. ஆனால்..இவை எல்லாம் இல்லாமல் என்னால் வாழ முடியாது. இது ஒரு வகை போதை. இப்போதைக்கு ஆட்பட்டவர்களில் ஜமீன் தார் கொடுத்த பணத்திற்கு அரிசி வாங்குவதற்கு பதிலாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டு  வந்து மனைவியின் எரிச்சலுக்கு உள்ளான பாரதி தொடங்கி.. இந்த அறியா பாமரன் வரை அனேகர் அடக்கம்.
             இம்முறை நான் வாங்கிய புத்தகங்கள் : பின் தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன், நிமித்தம்-எஸ்.ரா, என்ன நடக்கிறது இந்தியக்காடுகளில்-இரா.முருகவேள்,காவிரியின் கடைசி அத்தியாயம் –வெ.ஜீவகுமார்,ஷேக்ஸ்பியர் கதைகள்- ,கொற்கை- ஜோ டி குரூஸ், தோழர்களுடன் ஒரு பயணம் –அருந்ததிராய், அடைப்பட்ட கதவுகளின் முன்னால்( அண்ணன் பேரறிவாளனின் தாயார் அம்மா அற்புதம் அவர்களின் அனுபவங்கள் மலையாளத்தில் இருந்து, தமிழில் –யூமா வாசுகி ),மோடி-குஜராத்,இந்தியா ?-தமிழில் :சுரேஷ், வெண்கடல்-ஜெயமோகன், மரப்பல்லி-வாமுகோமு, எது சிறந்த உணவு-மருத்துவர்.கு.சிவராமன் –ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் –ஜான் பெர்க்கின்ஸ்(ஏற்கனவே விடியல் வெளியிட்டது என்னிடத்தில் உள்ளது. கொஞ்சம் கடின மொழி நடை.இது பாரதிபுத்தகாலயம் வெளியீடு ) ,அதிகார அரசியல்- அருந்ததி ராய், நள்ளிரவின் குழந்தைகள் –சல்மான் ருஷ்டி,  வெல்லிங்டன் – சுகுமாறன், வான்காவின் வரலாறு –இர்விங்ஸ்டோன் தமிழில் சுரா, தமிழ் இலக்கிய முற்போக்கு ஆய்வு முன்னோடிகள்-மூ.ச .சுப்பிரமணியன், இந்திய வரலாறு –இ.எம்.எஸ்.நம்புதிரி பாட், இராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்- தமிழன் பாபு, பகத்சிங் சிறைக்குறிப்புகள்- தமிழில் சா.தேவதாஸ், மாநில சுயாட்சி- முரசொலி  மாறன் -, பஷீர்- தனிவழிலோர் ஞானி, இந்துமதமும் காந்தியாரும்,பெரியாரும்-தொகுப்பு பசு.கவுதமன், இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு – தர்மதீர்த்த அடிகளார்,  அண்ணா ஆட்சியை பிடித்த வரலாறு –அருணன்,  மருந்தென வேண்டாவாம்-மருத்துவர்.கு.சிவராமன்,  நவீன தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்-ஜமாலன், வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நிலப்பரப்பு- ரேமண்ட் கார்வர், உணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்,  உணர்வும் ,உருவமும் ( அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்)- தொகுப்பு-ரேவதி, மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி-மோயோ கிளினிக் , காந்தி அம்பேத்கார் –மோதலும் சமரசமும்-அருணன், குஜராத் வளர்ச்சியா,வீக்கமா –சா.சுரேஷ், என் வாழ்க்கை தரிசினம்-ஜான்சி ஜேக்கப், அங்கிள் சாம்க்கு மாண்ட்டோ கடிதங்கள் –சரத் ஹசன் மாண்ட்டோ,  57 ஸ்னேகிதிகள் ஸ்கிநேகித்த புதினம்- வாமுகோமு, நிகழ்ந்தப் போதே திருத்தி எழுதப்பட்ட வரலாறு –மன்த்லி  ரெவ்யூ கட்டுரைகள், அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு –ஜான் பெர்கின்ஸ்,  சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், திராவிட இயக்கத்தின் எழுச்சியும்- அதியமான்,  இயற்கைக்கு திரும்பும் பாதை – மசானபு ஃபுகோகா, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே –தியோடர் பாஸ்கரன்
             எனது மகன் சிபி க்கு வாங்கி வந்த புத்தகங்கள் (அப்படிச்சொல்லி எனக்கும் வாங்கிக் கொண்டேன்)  :,வாத்து ராஜா- விஷ்ணுபுரம் சரவணன்,  சே குவேரா-படக்கதை,கிருஷ்ண தேவராயர்,அக்பர் , அசோகர்,சிவாஜி –வாழ்க்கை வரலாறு காமிக்ஸ்கள், முத்துக்காமிக்ஸ் வெளியீடுகள்.  
-மணி செந்தில்.
.

தமிழர் திருநாள் சிந்தனைகள்..



வழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு தெரு தான் . ஆனால் இன்றைய சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி பெட்டிகளில் வீழ்ந்துகிடப்பதும் வலிக்கிறது. முன்னெல்லாம் பொங்கல் திருநாளில் நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருந்தினர் தபால் காரர். அவர் கொண்டு வரும் வண்ண வண்ண அட்டைகளாக வந்து குவியும் பொங்கல் வாழ்த்துக்களில் நடிகர்கள்,தலைவர்கள் போன்றோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். காசுமீர் மலைகளும்,குமரிக்கடலும் நம் வீட்டில் எட்டிப்பார்க்கும்.. அந்த அட்டைகளின் எண்ணிக்கைதான் அக்காலத்து நம் குடும்ப கெளரவம். இப்போதெல்லாம் அலைபேசி குறுஞ்செய்திகளில் பொங்கலை குறுக்கி வாழ்த்தை வாட்ஸ் அப்பில் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.. சில சமயங்களில் அல்ல..பல சமயங்களில் அறிவியல் முன்னேற்றம் நம் இயற்கையான விழுமியங்களை விழுங்கி விட்டதோ என தோன்றுகிறது. ஆயிரம் இருந்தாலும்..பொங்கலில் தான் தமிழ் பிறக்கிறது,., வாழ்கிறது. … 

சற்று நேரம் முன்பு அண்ணன் சீமானிடம் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன்.. சொந்த கிராமமான அரணையூருக்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்.. வருடாவருடம் தமிழர் திருநாளன்று தன் தாய் மண்ணில் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பதையும் அவர் சொன்னார். மேலும் சொந்த மண்ணிற்கு திரும்புதல் தான் ஒவ்வொரு பூர்வகுடியும் கனவும் …என்று சொன்னார். அவர் சொன்னதைதான் நான் சிந்திக்கிறேன். நண்பர் பாக்கியராசன் கூட அயலக வாழ்வை விட்டு ஊருக்கு திரும்புவதை சொல்லும் போது..இறுதி காலத்துல நம்மூர்ல போய் மண்ணோடு மண்ணா கலந்துடணும் தல என்று சொன்னதையும் நான் நினைத்துப் பார்த்தேன். தம்பி அறிவுச்செல்வன் என்கிற ராசீவ் காந்தி கூட உயர்நீதிமன்றத்தில் கோட்டு போட்டுக்கொண்டு வழக்கறிஞராக நிற்பதை விடவும்..சொந்த ஊர் கண்மாயில ஆடு மேய்ப்பதைதான் அண்ணா பெரிதாக நினைக்கிறேன் என்று சொன்னதும் நினைவிற்கு வந்தது. விடுதலைக்கு விலங்கு நூலை நான் எழுதிய போது அதன் நாயகனான ராசீவ் கொலை வழக்கு ஆயுட் கைதியான அண்ணன் ராபர்ட்பயஸ் சொன்னார்..தம்பி என் ஊரில் இருக்கும் வானம் தான் இங்கும் இருக்கிறது என்ற நினைப்பில் தான் நான் வானத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார். தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கூட தன் பூர்வீக கிராமத்தில் தான் படுத்துக் கிடக்கிறார் . இப்படி சொந்த மண்ணை நேசித்தல் பூர்வக்குடிகளின் மகத்தான இயல்பு. இது மண் மட்டுமல்ல.. என் முன்னோர்களின் கனவினையும்,நினைவினையும், வாழ்வினையும் சுமக்கின்ற நிலம். அந்த நிலம் தான் எம் உயிர். அதில் மீத்தேன் காற்றை எடுக்கவும், எரிவாயு குழாய்களை புதைக்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது.. நீ என் நிலத்தை தோண்டுகையில் என் தாத்தனின் மார்பினை பிளக்கிறாய்.. மீத்தேன் காற்றை உறிஞ்சுகையில் உறைந்துக் கிடக்கும் என் முன்னோனின் மூச்சுக்காற்றினை உறிஞ்சுகிறாய்.. இனி எம் மண்ணை மலடாக்கவும்., நீ சம்பாதிக்க பொருளாக்கவும் நான் அனுமதித்தேன் என்றால்.. நான் என்னையே விற்கிறேன் என்று பொருள்.. # மீத்தேன் எரிகாற்றுக்கு எதிராக ஒலிக்கிற ஒவ்வொரு குரலும் … சாதாரண உரிமைக்குரல் அல்ல.. எம் மண்ணை மீட்டெடுக்கும் உயிர்க்குரல்..

இதோ..எம் நிலம் குறித்தும்..எம் மக்கள் குறித்தும் அப்படியே பிரதிபலிக்கிறார் அண்ணன் சீமான்..

http://www.youtube.com/watch?v=lULWQKHvq9U&feature=youtu.be

 

லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.

“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!”
“என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.”
– சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க.

 

சுதந்திரமான உணர்வோடு ..காத்திரமான சிந்தனைகளோடு..உலகம் தழுவி மனித நேயத்தை நேசித்த மாபெரும் இதழியலாளர். லசந்தா விக்கிரமதுங்க..
 
தன் கண்முன்னால் இனப்பேரினவாத அரசால் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படும் போது மெளனமாக சகித்துக் கொண்டு..தொலைக்காட்சி பெட்டியிலும், சாராயக்கடையிலும் வீழ்ந்துக்கிடக்க அவர் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழனில்லை. எந்த சாமியார் எந்த நடிகையோடு புரண்டார்.. இன்றைய தின பலன் என்ன..யார் யாரோடு ஓடிப்போனார்..ரஜினி அரசியலுக்கு வருவரா..கருணாநிதி-ஜெ வின் இன்றைய சண்டை என்ன..தொப்புள் காட்டி நடிக்க மறுத்த நடிகை..தல யின் செல்ல மகளுக்கு பிறந்தநாள்..இளைய தளபதியின் இளைய மகன் காலையில கக்கூஸ் போகல.. என்றெல்லாம் செய்திகள் வெளியிடும் தமிழக ஊடகவியலாளரும் இல்லை. சிங்களனாய் பிறந்தாலும் மனிதனாய் வாழ்ந்த லசந்தா விக்கிரமதுங்க மனசாட்சி கொண்ட பத்திரிக்கையாளனாய் (நம்ம ஆளுங்க போல..இல்ல ) வாழ்ந்தவர். ஒரு காலத்தில் தனது நண்பனாய் விளங்கிய சிங்கள பேரினவாத அதிபர் இராசபக்சேவை தனது எழுத்துக்கள் மூலம் பதற வைத்த லசந்தாவின் அறச்சீற்றம் சிங்கள பேரினவாதத்தை சுட்டெரித்தது. இதன் விளைவாக 2009 சனவரி 8 ஆம் நாள் அன்று சிங்கள பேரினவாத கைக்கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்த் தேசிய இனம் இன அழிப்பினை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய தனது தோழனை விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் துளிகளோடு நினைவு கூர்கிறது.. இன்று அவருடைய 4 ஆம் ஆண்டு நினைவு நாள்.

 
#  வீரவணக்கம்.

நமக்கென வாழ்ந்த நம்மாழ்வார் –சில நினைவுகள்.-மணி செந்தில்

 
 
 
அவரை முதன் முதலில் நான் பார்த்தப் போது யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் என்னை அவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்த போது கள்ளம் கபடமற்ற சிரிப்போடு என்னை கனிவாக பார்த்தார். சட்டை அணியாமல் சால்வை மட்டுமே அணிந்திருந்ததை  ஒரு சந்தேகமாக கேட்டேன்.ஆடு மாடு ,செடி ,கொடி எல்லாம் சட்டை போட்டுக் கொண்டா திரியுது ..?,மனுசப்பய தான் சொகுசா வாழ கத்துக்கிட்டான். தான் சொகுசா வாழ பூமியை அழிச்சி தின்னுக்கிட்டு இருக்கான் என சிரித்தார். அவர் எளிமையாக சொன்னாலும் என்னுள் வலிமையாக விதைத்தார்.அவர்தான் இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார். (விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டதை அவர் வெறுத்தார். என்னய்யா பெரிய விஞ்ஞானி..இருக்குறத கண்டுபிடிக்கிறதுல என்னய்யா விஞ்ஞானம்,வெங்காயம் இருக்கு…? மேலும் விஞ்ஞானி என்கிற பேர்ல பல வியாவாரி(வியாபாரி) இருக்கான்.நமக்கு எதுக்குய்யா விஞ்ஞானி, அஞ்ஞானி எல்லாம்..மனுசனா இருப்போம்யா..)
உண்மையில் அவர் ஒரு நேர்மையான விவசாயி. தன் மண்ணிற்கும்,மக்களுக்கும் மிக நேர்மையாக வாழ்ந்தார். எவ்வித பூச்சும், அலங்காரமும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்த அவர்..விவசாயத்தையும் செயற்கை ஒப்பனை அற்ற..இரசாயான மருந்துகள்,உரங்கள்  அற்ற மாபெரும் கலையாக நிகழ்த்தினார். பசுமைப்புரட்சி என்கிற பெயரில் எம்.எஸ் .சுவாமிநாதன் போன்றோர்  செயற்கையாக தயாரிக்கப்பட்ட இரசாயான உரங்கள் மூலம் இம்மண்ணை மலடாக்க வரிந்துக் கட்டி வேலைப் பார்த்த காலத்தில் தான் ..இம்மண்ணை தாயாக நேசித்த நம்மாழ்வார் தோன்றினார். பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக அல்லாமல் தன் வாழ்வின் ஒரு அங்கமாகவே பாவித்து வந்த தமிழன்..அறிவியலால்..வந்தேறி புகுந்த அயல் சிந்தனை தாக்கத்தினால் தன்னுடைய பூர்விக மரபை இழந்தான். பல வகைப்பட்ட தானிய விதைகளால்,,,நெல் வகைகளால் நிறைந்துக்கிடந்த தமிழனின் வாழ்க்கை உலகமயமாக்கப்பட்ட இந்திய பெரு முதலாளிகளின் கோரப்பசிக்கு இரையானது வேதனை வரலாறு. மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்தவன்…இன்று அதே யானையை பிச்சை எடுக்க வைத்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். இக்காலக்கட்டத்தில் தான் பாரம்பரிய அறிவினை மீட்போம் என்ற முழக்கத்தோடு அய்யா. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை போதிக்கத்துவங்கினார்.
பசுமைப்புரட்சி,விவசாய மறுமலர்ச்சி என்ற பெயரில் இம்மண்ணின் உயிர்த்தன்மையை கொன்றழிக்கும் வேலையை பல ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக இந்திய வல்லாதிக்கம் செய்து வருவதை அய்யா.நம்மாழ்வார் கடுமையாக எதிர்த்தார். தனது இறுதி காலத்தில் கூட தஞ்சை டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்க மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்களை அவர் முன்னெடுத்து வந்தார். வருகிற சனவரி 2014  மாதத்தில் 25 ஆம் நாளன்று மன்னார்குடியில் ஒரு லட்சம் தமிழர்களை திரட்டி மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திட அவர் முனைப்பாக இருந்தார். அதற்கென ஊருக்கு ஊர் பயணம் செய்து  விவசாயிகளை சந்தித்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தின் கேடுகளை விளக்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
நம்மாழ்வார்  இயற்கை வேளாண் அறிஞர் மட்டுமல்ல. பழந்தமிழர் உணவு முறைகளை அறிந்த மாபெரும் அறிஞர். நீர் பாசன அறிவியல் அறிந்தவர். மரபு வழி உடற்பயிற்சி அறிந்தவர். மிகப்பெரிய கதைச்சொல்லி. எள்ளலும், கிண்டலுமாய்,பாமர மொழியில் மாபெரும் கருத்துக்களை தெளிவாக உரைக்கும் வல்லமை உடைய மாபெரும் பேச்சாளர் , தொடர்ச்சியாக பல்வேறு இதழ்களில் இயற்கை வேளாண்மை பற்றியும், இயற்கை உணவு குறித்தும் மிக நுட்பமான தகவல்களோடு தரமான கட்டுரைகள் எழுதிய எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் செயல்பட்ட அவரது ஆளுமை தமிழ் அறிவுலகில் மகத்தானது. மணப்பாறை அருகே வானகம் என்ற பெயரில் மாபெரும் தோட்டம் அமைத்து இயற்கை வேளாண் வகுப்புகள், வாழ்வியல் முறைகள், போன்ற பல தளங்களில் முகாம்கள் நடத்தி எண்ணற்ற தமிழருக்கு அறிவூட்டிய நமது பெருமை மிக்க முன்னோன் நம்மாழ்வார் அவர்கள்.
பேரழிவிற்கு எதிரான இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை கட்டி அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இச்சமூகத்திற்கு எதிராக நடக்கும் சுரண்டல்,கொள்ளை உள்ளீட்ட அனைத்திற்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த போராளி.
நமக்காக வாழ்ந்தார். பூவுலகை நேசித்தார். இயற்கையை வாசித்தார். வாசித்ததை வஞ்சகம் இல்லாமல் ..கணக்கு பார்க்காமல் கற்பித்தார்.
அவருடைய இழப்பு  ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்திற்கான இழப்பு.
இயற்கை வேளாண் பெருங்குடியோன் அய்யா.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்.
-மணி செந்தில்.

 

காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்துக்கொள்ளகூடாது என முகநூலில் வேண்டுகோள் விடுப்போம் -பக்கவிபரம்,கடித மாதிரியோடு……


அன்பான வேண்டுகோள்!


கீழ்க்காணும் பிரிட்டிஷ் எம்.பி.க்களின், பிரதமரின், இளவரசர் சார்லசின் முகநூல் பக்கங்களுக்குப் போய் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலே நடத்தாதீர்கள் என்று வேண்டுகோள் வையுங்கள், தயவு செய்து. 
Please write to the British MPs, PM and Prince Charles through their Facebook pages and ask them to cancel the CHOGM summit in Lanka.தம்பி அண்டஸ் ராஜ் பெர்னாண்டோ தொகுத்தளித்த முகநூல் முகவரிகள்:
https://www.facebook.com/conservatives -Official page of conservatives ,https://www.facebook.com/CharlesHRH/-Prince charles offical page,https://www.facebook.com/DavidCameronOfficial?ref=br_tf– PM David Cameron,
https://www.facebook.com/markrtgarnier,
https://www.facebook.com/MichaelDugherMP,
https://www.facebook.com/JakeBerryMp,
https://www.facebook.com/stevebarclaymp,
https://www.facebook.com/StephenMcPartlandhttps://www.facebook.com/RobertHalfon,
https://www.facebook.com/PennyMordauntMP,
https://www.facebook.com/aluncairns,
https://www.facebook.com/PeterHain4Neath,
https://www.facebook.com/TonyBlair,
https://www.facebook.com/gordonhendersonmp,https://www.facebook.com/TessaJowell,
https://www.facebook.com/mpdamiancollins,
https://www.facebook.com/lynne.featherstone,
https://www.facebook.com/charles.kennedy.mp,https://www.facebook.com/KirstenGillibrand,
https://www.facebook.com/libdems,
https://www.facebook.com/…/Norman-Baker-MP/301915916488117,https://www.facebook.com/simonwrightmp,
https://www.facebook.com/pages/Danny-Alexander/374368637467,https://www.facebook.com/mike4eastleigh
https://www.facebook.com/justintomlinsonmp,
https://www.facebook.com/grant.shapps,
https://www.facebook.com/williamjhague,
https://www.facebook.com/laura.sandys.mp
https://www.facebook.com/NadineDorriesMp,
https://www.facebook.com/NadineDorriesMp,
https://www.facebook.com/pages/Lisa-Nandy/194243072092,https://www.facebook.com/matthewhancockmphttps://www.facebook.com/…/Gregory-Barker-MP/300459839764,https://www.facebook.com/rachelreeves10,
https://www.facebook.com/kerry4mp,
https://www.facebook.com/NadhimZahawi,
https://www.facebook.com/barrygardinerMP,
https://www.facebook.com/pages/Rushanara-Ali/37684209618https://www.facebook.com/pages/Gordon-Brown/67132943785https://www.facebook.com/arnaudmontebourg.frhttps://www.facebook.com/luciana4wavertree
https://www.facebook.com/dmiliband
https://www.facebook.com/pages/Stella-Creasy/7916859303https://www.facebook.com/ChukaUmunnaMP
https://www.facebook.com/pages/David-Lammy-MP/19129786540https://www.facebook.com/pages/Sadiq-Khan/275283499191111https://www.facebook.com/edmiliband
https://www.facebook.com/EmmaReynoldsMP
https://www.facebook.com/agriffithsmp
https://www.facebook.com/andy4hammersmith https://www.facebook.com/luciana4wavertree
https://www.facebook.com/Debbie.Abrahams
https://www.facebook.com/liewchintong.my
https://www.facebook.com/pages/Dennis-Skinner/60783991559https://www.facebook.com/YunusCentre
https://www.facebook.com/khaleda.zia
https://www.facebook.com/clive.efford
https://www.facebook.com/tonybennfilm
https://www.facebook.com/pages/Jeremy-Corbyn/330250343871https://www.facebook.com/steve.webb2
https://www.facebook.com/pages/Nic-Dakin/186874346397https://www.facebook.com/RoryStewartMP
https://www.facebook.com/ChrisAlexanderCanadahttps://www.facebook.com/pages/Hon-Diane-Ablonczy/9147373095https://www.facebook.com/pages/Michelle-Rempel/126806667378661https://www.facebook.com/erinotoolecpc
https://www.facebook.com/JimMFlaherty

எழுத வேண்டிய விண்ணப்பம்:

Dear Sir:

Greetings! I write to request you to cancel the forthcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo as the host country’s leader, President Mahinda Rajapakse, stands accused of committing a wholesale genocide and serious war crimes against the minority Tamil people in his country.

After all, the Charter of the Commonwealth reaffirms 16 wonderful ideals as the “core values and principles of the Commonwealth”. If this is indeed true and if “We, the people of the Commonwealth” also include some 100 million Tamil people living all over the world, please cancel the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo and avoid making a war criminal the next Commonwealth Chair-in-Office.

Looking forward to your favorable action, I send you my best personal regards and all peaceful wishes.

Sincerely,

Your Name
(On behalf of some 100 Million Tamils)

 
நன்றி : இடிந்தகரையின் இடியாத போராளி அண்ணன் சுப.உதயகுமார். 

ஜெயமோகனின் தமிழ்மொழி எதிர்ப்பும்..சித்தனான தோசை மாஸ்டரும்..

 
ஒவ்வொரு மனிதரும் ஏதோ வகையில் சிறப்பானவராக இருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு தோசை மாஸ்டர் இருக்கிறார். கும்பகோணத்தின் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் அவர் தோசை மாஸ்டராக பணிபுரிகிறார். அவரின் கைப்பக்குவத்திற்கென்றே ஒரு கூட்டம் கூடும். தோசை சுடுவதில் வல்லவரான அவருக்கு கொஞ்சம் சித்தர் பாடல்களிலும் அறிமுகம் உண்டு. இரவு நேரத்தில் வேலை முடித்த பின்னர்..2 ரவுண்டு உள்ளே போனவுடன் அவருக்குள் மறைந்துக் கிடக்கும் சித்தர் வெளியே டபக்கென்று குதித்து விடுவார். பிறகென்ன…அந்த ஹோட்டலே சித்தர் மடமாகி விடும். அப்போது தன் எதிரே வருபவரை உற்று பார்ப்பார்.( அப்படியாக அவர் நினைத்துக் கொள்வார்..இருக்குற போதையில எங்கிட்டு உத்து பாக்கிறது..? ) .கண்களை விரித்துக் கொண்டு பெரிய சித்தர் போல எலும்பும், சதையுமாவது ஏதடா..இலக்கமிட்டு இருக்குதோ..என்றெல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் அவிழ்த்து விடுவார். போதை உச்சத்தில் வேட்டி அவிழ்ந்தவுடன் பார்ட்டி கவிழ்ந்துவிடுவார்.காலையில் வழக்கம் போல் தோசை மாஸ்டர். இப்படிப்பட்ட நபரிடம் சித்தர் பாடல்கள் குறித்து விளக்கம் கேட்டால் எப்படி இருக்குமோ…அப்படி இருக்கிறது  4-11-2013 தேதிய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் எழுதிய ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ..? என்கிற உலக  மகா ஆராய்ச்சிக்கட்டுரை. 
சென்னையில் ஒரு புத்தககடையில் ஆங்கில புத்தகம் 2000 விற்றதாக இவர் பார்த்ததிலிருந்து தொடங்குகிறது அக்கட்டுரை.  நூலகம் போக தமிழ்நூல்கள் எல்லாம்  500 படிகள் மட்டுமே விற்பதாக இவர் வருந்தி பாரம் சுமக்கிறார் . இவற்றில் எல்லாம் நாம் தலையிட வேண்டாம் .ஏனெனில் அது வியாபாரக் கணக்கு. தமிழ் மொழியில் புத்தகம் விற்கவில்லை என்றால் ஏங்க நீங்க இன்னும் தமிழிலேயே எழுதுறீங்க என்றோ நீங்கள் கட்டுரை எழுதும் ஆங்கில நாளிதழாக இருந்த தி ஹிந்து நாளிதழே தமிழ்ப் பதிப்பு கொண்டு வந்து விட்டதே என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. ஏனெனில் அவையெல்லாம் வடிவேல் கொண்டை போல வெளிப்படை. அடுத்தடுத்த வரிகளில் தான் சிங்கம் தனியே நின்று பெளலிங் போடாமலேயே சிக்ஸர் அடிக்க துவங்கிறது. உலக மயச்சூழலில் ஆங்கிலம் மட்டும் தான் வேலைவாய்ப்பு மொழியாம். இளையத்தலைமுறை எல்லாம் ஆங்கிலத்தில் தான் படிக்கிறார்களாம் என்பது போல உருளுதாம்..சாயுதாம் வகை கருத்துக்கள். எதை இவர் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை பற்றி மிகப்பெரிய அறிஞர்கள் எல்லாம் கத்திக் கதறிக் கொண்டிருக்க ,ஜெயமோகன் மட்டும்  தமிழ் மொழி மட்டுமே  சொந்தமாக, அடையாளமாக இருக்கிற தமிழினம் ஆங்கிலம் படிக்க ரெகமண்ட் பண்ணுகிறார். ஆங்கில கல்வி படிக்க எதிர்ப்பு தெரிவிப்பது அடிப்படை வாதமாம். மரபணு அறிவியல் மூலமாக தாய்மொழிக் கல்வி பயலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி மாற்று மொழி பயிலும் குழந்தையை விட அதிகமாக உள்ளது என்பதை மயில்சாமி அண்ணாதுரை முதல் அப்துல் கலாம் வரை நிருபித்து விட்ட பிறகும் கூட ஜெயமோகனுக்கு ஆங்கில மோகம்.
 
 தாய்மொழியை இரண்டாவது மொழியாக கொள்வதினால்..தாய்மொழி கல்விக்கான மொழியாக இல்லாததினால் .. தாய்மொழி மீது குழந்தைகளுக்கு கவனம் இல்லையாம். அதனால்  தாய்மொழியை தகர டின்னுக்குள் அடைத்து தாய்லாந்திற்கு கடத்திடலாம் என்ற அளவிற்கு பிதற்றிக் கொண்டே போய் இறுதியில் ஒன்றை சொன்னது தான் சூப்பர் டூப்பர் ஹிட் .
அதாவது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் எழுத்துருவில்  எழுதுவதை விட…நேரடியாக ஆங்கிலத்திலேயே தமிழை எழுதினால் என்ன என்று கேட்கிறார் ஜெயமோகன். என்ன புரியலீயா.. அதாவது தமிழ் எழுத்துருவை ஆங்கிலத்தில் தானே தட்டச்சு செய்கிறீர்கள் ( amma inke vaa vaa.. என்று தட்டும் போது அம்மா இங்கே வா ..வா.. என்று வரும் இல்லீயா அதைத்தான் அண்ணாத்தே சொல்றார். ) அதற்கு பதில் இனி தமிழ் எழுத்துருவே தேவையில்லாமல், நேரடியாக amma inke vaa vaa  என்று படித்து புரிந்துக்கொள்ள வேண்டுமாம். இதுதான் அய்யாவின் பயங்கரமான பரிந்துரை..
ஏங்க அப்படி ஆங்கிலத்தில் அடித்து தமிழாய் எழுத்துரு வருவதில் உங்களுக்கென்ன தகராறு என்று எளிமையாய் கேட்டால்..இரு மொழி பயில்வதில் குழந்தைகளுக்கு குழப்பமாம் .அதனால் தாய்மொழியை ஆற்றோடு விட்டு விடலாம் என்கிறார். எங்கள் கும்பகோணத்தில் செளராஷ்டிரா என்கிற இன மக்கள் வாழ்கிறார்கள். பட்டு நெசவுதான் அவர்களின் தொழில். இன்னும் ஜெயமோகனுக்கு நெருக்கமாக சொல்வதென்றால் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் கூட அவ்வினம் தான். அவர்களின் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு பேச்சு வழக்கு உண்டு. ஆனால் எழுத்து வழக்கு  வரலாற்றின் போக்கில் இல்லாமல் போய் விட்டது. எனவே எழுத்து வழக்கில்லாத அவர்கள் தமிழில் தான் எழுதி, செளராஷ்டிரத்தில் பேசி வருகிறார்கள். சமீப காலத்தில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தங்கள் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு என  எழுத்து வகையை கண்டறிவது என. அதெற்கென ஒரு குழு அமைத்து செயல்பட துவங்கி உள்ளார்கள். இப்படி எழுத்து வகையே அழிந்த ஒரு மொழிக்கு எழுத்தை தேடி கண்டடைய முயல்கிறது செளராஷ்டிரா இனம். ஆனால் சங்கப்பாடல்களும், இலக்கியங்களும் செறிந்த செம்மொழியின் எழுத்துத்தன்மையை கணிணியில் அழிக்கும் ஆலோசனையைத்தான் ஜெயமோகன் தந்திருக்கிறார்.
 
கணிணியில் தமிழ் எழுத்துரு உண்டாக்க எத்தனையோ முயற்சிகள் வரலாற்றில் நடந்திருக்கின்றன. டாஸ் (DOS ) ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்கிற இயக்க முறைமையில் ஆரம்பகால கணிணிகள் இயங்கின என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட டாஸ் இயக்க முறைகளிலேயே 1980 களில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. படிப்படியாக டாஸ்,லினக்ஸ்,மேக் போன்ற இயக்க முறைமைகளில் தமிழ்மொழி மென்பொருட்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டு இறுதியாக விண்டோஸ் என்று அழைக்கப்படும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மைக்ரோ சாட்டின் இயக்கமுறையில் தமிழ் எழுத்துரு பயன்படுத்தும் முறை ஏற்பட்டு இருக்கிறது. (இன்னும் விரிவான வரலாற்றிக்கு  கணித்தமிழின் காலடித்தடங்கள் –மு.சிவலிங்கம் காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-76/kanithamizh02.htm)
எனவே இருக்கும் எழுத்துருவினை மேம்படுத்த எண்ணாமல் , அழித்து விட்டு ஆங்கிலத்திலேயே தமிழை தட்டச்சு செய்து..ஆங்கிலத்திலேயே படிக்க பரிந்துரைக்கும் ஜெயமோகனின் பிதற்றல் எடுத்த எடுப்பிலே விவாதிக்கும் தகுதியை இழக்கிறது.. ஆங்கில புத்தகங்கள் தான் விற்கிறது என்றால்…தாராளமாக ஜெயமோகன் ஆங்கிலத்தில் எழுதப் போகலாம். அவர் சொன்னது போல இங்கிலி தமிழில் ( தங்கிலீஷ் போல..) எழுதலாம். யாரும் தடுக்கவில்லை. தமிழாவது பிழைக்கும்.
இலக்கிய தகுதி இருப்பதாலேயே அனைத்திற்கும் ராஜகுருவாக கிரீடம் சூட்டிக் கொள்ள முயல்வது பேதைமை. இந்த பேதைமை பல முறைகளில் ஜெயமோகனிடம் எக்குத்தப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. இம்முறை கொஞ்சம் அதிகம்.
இந்த கட்டுரையின் முதற்பகுதியில் நிறைய ஆங்கிலச்சொற்கள், கலவைச்சொற்களை பயன்படுத்தியுள்ளேன். எதையும் சீரணிக்க..முழுங்க..ஆட்பட..ஆக்கிரமிக்க..இறுதியில் வெல்ல.. எம் தாய்மொழிக்கு தகுதி. உண்டென காட்டத்தான் அவை.
-மணி செந்தில்
www.manisenthil.com.

பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..

தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில்  எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என சிந்திக்க வைத்ததில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக புறப்பட்டு இருக்கின்ற புதிய அரசியலுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
எப்படிப்பட்ட மகத்தான தத்துவமும் ,கருத்தும்  உரிய தலைமைகளால் உறுதியாக்கப்படாவிட்டால் உருக்குலைந்து போகும் என்ற சரித்திர உண்மைக்கு சமீபத்திய சரியான எடுத்துக்காட்டு திராவிடம் .
திராவிடம் என்பது மொழியா என்றால் இல்லை.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நீளும் ஒரு மொழிக் குடும்பத்தின் பொதுப்பெயராகத்தான் நான் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல். நான் இனத்தால் திராவிடன்,மொழியால் தமிழன் என கதறும் திமுக தலைவர் கருணாநிதி கருத்துப்படி அது இனத்தினை குறிக்கும் சொல்லா என்றால் ஒரு இனத்திற்கான வரையறைகளான ஒரே மொழி, குறிப்பிட்ட நிலம், பொதுவான பொருளாதார வாழ்வு,பொது பண்பாட்டில் வெளிபடும் தாம் ஓரினம் என்ற உளவியல் என்பவைகளான எவையும் திராவிடத்திற்கு பொருந்தவில்லை. பிறகு திராவிடம் ஒரு நிலமா என ஆயும் போது வடவேங்கடம் தென்குமரியோடு தமிழன் எல்லை முடிந்து விட்டது எனில் திராவிட நிலம்  என்பது என்ன..? .மராத்தியும்,குசராத்தும் கூட ஒரு காலத்தில் திராவிட நிலங்களாக கருதப்பட்டிருக்கிறது .1948 ஆம் ஆண்டில் திருவாரூர் மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார் இனி திராவிடம் என்ற சொல் மண் சார்ந்ததாக இருக்க இயலாது என அறிவித்தார்.   பிறகு நிலமும்,இனமும்,ஒரு மொழியும் இல்லாத திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரு நிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்னமும் ஆள துடிக்கிறது எனில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளான  தமிழர் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்குரல் எப்படி தவறாகும் .?
 இன்றைய திராவிட கருத்தியல்களுக்கு மூல அமைப்பாக தோன்றிய நீதிகட்சியின் தோற்றம் 1916 –ல் நடந்தது. பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக துவங்கிய அதன் துவக்கம் ‘திராவிடம்’ என்ற பெயரில் துவங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 1916 துவங்கி அதன் இறுதியான காலம் 1936 வரையிலான 17 ஆண்டுக் காலத்தில் தமிழர் எவரும் அக்கட்சியில் தலைவர் ஆனதில்லை.  அது மட்டுமில்லாமல் பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக கருதப்பட்ட நீதிக்கட்சியின் ஆதரவோடு என்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் என்ற பார்ப்பனர் கூட அமைச்சராக முடிந்தது.
 ஆனால் அக்கட்சியில் இருந்த இரட்டைமலை சீனிவாசன்,திரு.வி.ஐ.முனுசாமி பிள்ளை,திரு.தர்மலிங்கம் பிள்ளை , திரு என்.சிவராஜ் போன்ற  படித்த பட்டதாரி தமிழர்கள் அமைச்சராக கூட ஆகமுடியவில்லை. தமிழனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததுதான்  இவர்களின் மாபெரும் தகுதி குறைவு.  1923 முதல் 1933 வரை சென்னை சட்டமன்றத்திற்கு சென்னை தொகுதிக்கு உரிய 4 பொது இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 3 பேர் தமிழர் அல்லதோர். 1 தமிழர். மேலும் நீதிக்கட்சி ஆண்ட 16 ஆண்டு காலத்தில்  சென்னை மாநகராட்சிக்கு தெலுங்கரே கமிசனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1916-ல் நீதிக்கட்சி பிறந்த போது  தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் துவங்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டீஸ் எனவும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனவும் துவங்கப்பட்ட அந்த நாளிதழ் தமிழில் மட்டும் ‘திராவிடன் ‘ என்ற பெயரில் வெளிவந்தது மிகவும் கவனிக்கத்தக்கது.
திராவிடம் பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டு சொல். தமிழன் என்றால் பார்ப்பான் புகுந்து விடுவான்.திராவிடன் என்றால் பார்ப்பனுக்கு இடமில்லை என்பதான திராவிட சிந்தனை மரபு எங்கிருந்து துவங்கியது என நாம் ஆராயும் போது  தென்னிந்தியாவில் பிறந்த திருஞான சம்பந்தரை ’திராவிட சிசு’ என  அழைப்பு ஆதிசங்கரனின் விளிப்பு    நமக்கு தெளிவாக அறிவுறுத்துவது என்னவென்றால்  20 ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூகத்தேவைகளே பார்ப்பனரல்லாதோரை ஒரு குடையின் கீழ் திரட்டும் அரசியல் தந்திரோபயமான (political tactics)  சொல் ‘திராவிடம்’ என்பதுதான் .
எதையும் இவரிடம் இருந்துதான் துவங்க வேண்டி இருக்கிறது. இதையும் இவரிடமிருந்துதான் துவங்கி இருக்கிறோம். தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக பெரியார் நிறுத்தும் அரசியல் கண்டிப்பாக முரண் தன்மை உடையது என்ற புரிதலில் தான் நாம் பெரியாரை அணுகுகிறோம்.
தமிழ் நாட்டினை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரத்தக்குரலை முதன் முதலில் அரசியல் தளத்தில் எழுப்பிய தந்தை பெரியாரை தமிழ்த்தேசிய உணர்வின் மூலவராக நாம் அறிகிறோம். தமிழ்நாடு தமிழருக்கே  என்ற குரலை தனது அரசியல் வாழ்க்கையின் துவக்க காலத்திலும், இறுதி காலத்திலும் தீர்க்கமாக முழங்கிவிட்டு போன அவரது தெளிவு  இன்று மாற்றார்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற துடிப்பை உள்ளுக்குள் உருவேற்றிக் கொண்டு உதட்டில் திராவிடம் முழங்கும் அறிஞர்களிடம் உண்டா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
‘1924 முதல் 1954 வரை ஒரு தமிழன் கூட முதன் மந்திரியாக வரமுடியவில்லை. முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார்”. (காமராசர் முதல்வரான போது தந்தை பெரியார் விடுதலையில் 3-12-19)
காமராசரை தந்தை பெரியார் ஆதரித்தது வரலாற்றின் ஏடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமராசரை தந்தை பெரியார் ஆதரித்து பேசிய பெரும்பாலான கூட்டங்களில் அவரை ‘பச்சைத் தமிழர்’ என அழைத்ததன் அரசியலை இப்போது உள்ள ’திராவிட பற்றாளர்கள்’ ஏற்பார்களா ? –இதில் பச்சை என்கிற சொல்லில் தான் தந்தை பெரியாரின் ஆன்ம விருப்பம் புதைந்து கிடக்கிறது. மிகவும் தூய இரத்த கலப்பில்லாத மண்ணின் மரபணு மைந்தனாக (purest)  காமராசரை தந்தை பெரியார் உருவகிக்கிறார். வெறும் தமிழர் என்று சொன்னால் போதாது.அதிலும் கறார் தன்மை கொண்டு,இன்னமும் வடிகட்டிய வார்த்தையான ‘பச்சை தமிழராக’காமராசரை தந்தை பெரியார் அடையாளம் காட்டியது எதற்காக.? தமிழ்நாட்டினை திராவிடன் என்ற பெயரால் தெலுங்கனும்,கன்னடனும்,மலையாளியும், ஆள்வதற்காகவா..?- ஒரு தலைவனை முன்னிருத்தும் போது தந்தை பெரியாருக்கு இருந்த புரிதல்,அக்கறை ஏன் இந்த திராவிடவியாளர்களுக்கு இல்லை ?
தமிழன் என்று பேசினால் தந்தைபெரியாரை எதிராக நிறுத்துவதென்பது அவரது சிந்தனைகளுக்கு திராவிட பற்றாளர்கள் செய்கிற துரோகம்.
 ஒரு திராவிட இயக்கத்திற்கு கன்னடத்து ஆரிய தலைமை வாய்த்தது பற்றியோ,பெரியாரின் பள்ளியில் பயின்று சாய்பாபாவின் பெருந்தொண்டராக மாறிப் போன மஞ்சள் துண்டு போர்த்தி ,குடும்ப உறுப்பினர்களின் சோதிட ஆலோசனைகளின் பேரில் செயல்படும்  கருணாநிதி தலைமை தாங்குவது பற்றியோ, ஒரு தனியார் நிறுவனமாக  திக வை மாற்றிய கார்ப்பரேட் முதலாளி வீரமணி பற்றியோ , ஈசானி மூலையில் புறாக்களை பறக்க விட்டு,திருப்பதி கோவிலில் திராவிட கட்சி துவக்கப் பத்திரிக்கையை வைத்து துதித்த விஜயகாந்த் பற்றி திராவிட பற்றாளர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் விசுவாசம் போற்றும் இம் மண்ணின் மைந்தர்கள் மேல் தான் இவர்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ,முல்லை பெரியாற்றிலும், காவேரி நதி நீரிலும்,பாலாற்றிலும், பிற ’திராவிட’ சகோதரர்களால் பாதிக்கப்பட்ட பிறகு,இந்த இத்துப் போன திராவிடத்தினை  மற்ற திராவிட இனங்கள் என இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தெலுங்கர்களோ,மலையாளிகளோ,கன்னடர்களோ  ஒரு முடியளவு கூட மதிக்காத நிலை இருக்கும் போது தமிழனை மட்டும் திராவிடனாய் இருக்கச்சொல்லுவதன் அரசியல் இந்த மண்ணில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பெற்றிருக்கின்ற, தொடர்ந்து பெற்று வருகின்ற சமூக,கலை,அரசியல்,பண்பாட்டு செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் தொலைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக என்பது அப்பட்டமாக தெரிகிறது .
தமிழன் என்றால் பார்ப்பனர்கள் இடம்பெற்று விடுவார்கள் என்கிற அச்சம் தேவையற்றது மற்றுமல்ல, நம்மை நம் அடையாளத்தின் மூலம் அங்கீகாரம் பெறுவதை தடுக்கின்ற திராவிடத்தின் சூழ்ச்சி என நாம் தெளிவாக வேண்டும். இன்று எந்த தமிழ்த்தேசிய அமைப்பிலும் பார்ப்பனர்கள் இடம் பெறுவது இல்லை. .இது வரை இடம் பெற்றுதும் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகளில் இன்று இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் பட்டியலை நாம் வெளியிட்டால் இப்பக்கங்கள் போதாது தமிழ் ,தமிழர் என்று பேசினால் இந்து ராம்,துக்ளக் சோ, மாலன்,சுப்பிரமணிய சாமி போன்ற அக்கிரகாரத்து அசல் மனிதர்களுக்கு இன்றும் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது என்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் தமிழ் மண்ணில் உண்டு. ஆரிய படை வேண்டாம், ஆரியத்தின் சடையை தொட்ட திராவிட மன்னன் என்று எங்கேயும் குறிப்புகள் உண்டா.? 
1933 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாரின் முழக்கம் அப்போது ஆரிய பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. ‘எலி வலை எலிகளுக்கே’ என எகத்தாளம் பேசவும் வைத்தது, ஆரியத்தின் தீவிர எதிரி தமிழ்த் தேசியமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய திராவிடம் எக்காலத்திலும் இல்லை.
திராவிடத்தின் இன்றைய இலக்கு தமிழ் மண்ணில் தமிழனைத் தவிர மற்றவர்களுக்கான அரசியல் இடத்தினை உறுதி செய்வது . இம் மண்ணின் மைந்தர்கள்  மண்ணை ஆள விரும்பும் இயல்பான விருப்புறுதியை குலைப்பது.
நான் பிறப்பால்,மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் தமிழன். நான் ஏன் திராவிடன் என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டால் யாரிடமும் பதிலல்லை.  பார்ப்பனரல்லாதோருக்கான ஆரிய எதிர்ப்பு அரசியல் குறியீட்டுச் சொல்தான் திராவிடம் என்றால் இன்றைய திராவிடம் என்ற கருத்தியலின் அரசியல் வடிவங்கள் அதற்கு முற்றிலும் முரணானவை. நான் மொழியால் தமிழன்,இனத்தால் திராவிடன்,நாட்டால் இந்தியன் என குழப்பும் கருணாநிதி  1947க்கு முன் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்.? கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதுவதற்கு முன்னால் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்..? .
இந்தியம்,திராவிடம் என்ற இரண்டுமே தமிழ்த்தேசிய கருத்தியல்களுக்கு எதிரானவை. தமிழரின் தனித்த அடையாளங்களை, இறையாண்மையை மறுப்பவை. மேலும் இவைகள் தான் ஆரியத்தினை பாதுக்காக்கும் கவசங்களாய் இன்று செயல்படுபவை.ஈழத்தின் அரசியலில் சிங்களனின் ஆதிக்கத்தினை எதிர்க்கும் திராவிட பற்றாளர்கள் இங்கே ..இந்த மண்ணில்  தமிழனின் அரசியலில் தெலுங்கனின், கன்னடனின் ஆதிக்கத்தினை ஏன் இங்கே எதிர்க்க மறுக்கிறார்கள் ?
திராவிடம் எனும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. திராவிடம் என்பது கற்பனை –(பாவலரேறு பெருஞ்சித்திரனார். –வேண்டும் விடுதலை –பக்கம் எண் 294,295 )
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூட தனது இறுதிக்காலத்தில் தமிழ்த்தேசியராகத்தான் வாழ்ந்தார் என்பதும்,திராவிட நாடு என வருகின்ற இடத்தில் செந்தமிழ்நாடு என திருத்தினார் என்பதும் வரலாறு. எம் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்  இந்த இனத்தினை தமிழ்த்தேசிய இனம் என்றுதான் வரையறுத்தாரே தவிர திராவிட இனம் என திருகி குழப்பவில்லை.
தமிழர்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை ஆதி திராவிடர்கள் என அழைத்த திராவிட பற்றாளர்கள் ஆதி திராவிடர் என ஆந்திராவில் யாரையாவது அடையாளம் காட்ட இயலுமா ? தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலை கருதி 1890- துவங்கப்பட்ட பறையர் மகாஜன சபை 1910 ஆண்டு கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் தாக்கத்தினால் ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த சபை 1918 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை பறையர்-பஞ்சமர் என குறிக்கக் கூடாது, ஆதி திராவிடர் என குறிக்க வேண்டும் என மனு அளித்தது. ஆனால் தெலுங்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. தங்களை ஆதி ஆந்திரர் என அறிவிக்கவேண்டும் என போராடிய தெலுங்கர்கள் வென்றார்கள். தாழ்த்தப்பட்ட கன்னடர்களும் தங்களை ஆதி திராவிடர் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை ஆதி கன்னடர் என்றுதான் பதிய வேண்டும் எனவும் போராடி வென்றார்கள். 1922 –ல் சென்னை சட்டமன்றத்தில் நீதிக் கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் படி தமிழன் ஆதி கன்னடன் ஆதி கன்னடன் ஆனான். தெலுங்கன் ஆதி தெலுங்கன் ஆனான். ஆனால் தமிழனை மட்டும் ஆதி திராவிடன் ஆக்கி ‘திராவிட’ தொடர்பினை அறுந்து விடாமல் பாதுகாத்தது நீதிக்கட்சியில் ஆதிக்கம் பெற்ற தெலுங்கர்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே ஆகும்.  ஆந்திராவினைச் சேர்ந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமராவ் அந்த மண்ணுக்கான அரசியலை முன் வைத்து தெலுங்கு தேசம் துவங்கினார். ஆனால் நம் நாட்டு நடிகர் விசயகாந்த் திராவிடத்தில் தேசியத்தினை ஊற்றி முற்போக்கில் முழ்கினார். ஏனெனில் திராவிடம் என்று சொன்னால் தான் தமிழர் அல்லாத மாற்றார்கள் தமிழ் மண்ணில் அரசியல் பிழைக்க தகவாக இருக்க முடியும்.
தந்தை பெரியார் திராவிடம் என்ற கருத்தியலை சமூகத்தளத்தில் பயன்படுத்தியதன் நோக்கம் மிக வெளிப்படையானது. தீவிர பார்ப்பன எதிர்ப்பினை சமூக மாற்றத்திற்காக தன் கையில் எடுத்த தந்தை பெரியார் சமூகக் கொடுமைகளுக்கு ஆதாரமாக இந்து மதமும், அது பாதுகாக்குகிற பார்ப்பன மேலாண்மையும் இருப்பதை கண்டார். எனவே தான் இந்து மத எதிர்ப்பு,மற்றும் அது சார்ந்த கடவுள் மறுப்பு, அது வளர்த்து வந்த சமூக பண்பாட்டு காரணிகளை வேறோடு வீழ்த்துதல் ஆகியவற்றை தனது அரசியலாக அவர் கொண்டார். இந்து மத பண்பாட்டினை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய ஆயுதங்களாக தமிழ்மொழியும், அதன் இலக்கியங்களும் இருப்பதை உணர்ந்தார். தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன் வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி,திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர்,  பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்  போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர். பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன்,அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு. சித்தர் மரபில் துவங்கி ,தந்தை பெரியாரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியாக செழுமையடைந்து, ஈழம் கற்றுத்தந்த பாடங்களை உள்வாங்கி இன்று தமிழ்த்தேசிய கருத்தியல் தனக்கென அரசியல் வெளியையும் தகவமைக்க துவங்கியுள்ளது. தமிழ் மொழி கல்வி குறித்து ஆழமாக சிந்தித்த தந்தை பெரியாரை ஆங்கிலம் படிக்கச்சொல்லி தமிழை தவிர்க்கச்சொன்னார் பெரியார் என முழங்கும் திராவிட பற்றாளர்கள்
”ஆங்கிலம் வளர்ந்த மொழி-விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி யடையாத பழங்கால மொழி என்பதும் எனது மதிப்பீடு .இதை நான் சொன்னதற்கான மிக முக்கியமான நோக்கம் தமிழ்மொழி ஆங்கிலம் அளவிற்கு விஞ்ஞான மொழியாக,பகுத்தறிவு மொழியாக ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்ழொழி மீது எனக்கு  தனி வெறுப்பில்லை. நான் பேசுவதும் ,எழுதுவதும் தமிழில் தான்”. (1-12-1970 விடுதலை தலையங்கம்) என்று தமிழ்மொழி மீது பெரியார் கொண்டிருக்கிற பற்றினை, மொழி வளரவேண்டும் என்கிற பரிதவிப்பினை உணர்வார்களா..?. அவருக்கு தமிழ் மொழி மீது இருந்த காத்திரம் அதன் சமயம் சார்ந்த தன்மை பொறுத்ததே தவிர கண்டிப்பாக  அதன் இனம் சார்ந்த  தன்மை பொறுத்தது இல்லை.
 தந்தை பெரியார் தனது இறுதி காலம் வரை முழங்கிய முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அவரது இறுதி பிறந்த நாள் அறிக்கையிலும் (1973 செப்டம்பர் ) தனது உறுதியான ,இறுதியான விருப்பத்தினை உரக்கச் சொல்லி விட்டுத்தான் போனார். தந்தை பெரியார் நின்ற காலமும் ,களமும் இன்று வெகுவாக மாறி இருக்கின்றன.  வெகு சன அரசியல் விழிப்புணர்வு கூடியிருக்கிறது. ஈழத்தின் அழிவு உணர்வினையும்,விழிப்பினையும்,பாடங்களையும் போதித்து இருக்கிறது. எனவே ,  என்ன சொன்னாலும் அப்படியே ஏற்காதே என்றும் சிந்தித்து செயல்படு என்றும் அறைகூவிய தந்தை பெரியாரின் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் போல சூழலின் பாற்பட்டு, தற்காலத்திற்கேற்றாற் போல் தகவமைக்க வேண்டிய மாபெரும் கடமை அறிவுலகத்திற்கு உண்டு. தமிழ்த் தேசிய கருத்தியலை சமூக நீதி புரிதலின் வழி நின்று பெரியார் சிந்தனை மரபின் தொடர்ச்சியாய் வளர்த்து வார்த்தெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடர். அதை மறைக்காமல்,மறக்காமல் வெளிப்படுத்திய உண்மையாளர். தமிழ்மண்ணில் தனக்கென எழுந்த அரசியல் ஆதரவை தன் பதவிக்காக பயன்படுத்தாமல்  ஒரு தமிழனை முன் நிறுத்திய தகைமையாளர். அர்ஜெண்டினா நாட்டில்பிறந்தாலும் கியூப விடுதலைக்கு பாடுபட்ட சே குவேரா போன்ற, உலகப்பந்தின் ஏதோ மூலையில் பிறந்தாலும் உலக மாந்தனின் பசி பற்றி சிந்தித்த மாமனிதர் மார்க்சைப் போல ஆளுமை மிக்க புரட்சியாளர். அவரை புறக்கணித்து தமிழ்த் தேசமோ,தமிழ்த் தேசியமோ இல்லை. மாறாக அவர் வகுத்த பாதையில் தான்  தமிழர்கள் இன்றளவும் தனக்கான தேசியக் கருத்தியலோடு நடக்கிறார்கள்.
ஆம் எம் தந்தை பெரியார்.
 கண்டிப்பாக கன்னடனுக்கோ,தெலுங்கனுக்கோ,மலையாளிகளுக்கோ அல்ல.  
 தொடர்புடைய நூல்கள்:
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –கால்டுவெல்
2. திராவிடம் தமிழ்த்தேசியம்-பெ.மணியரசன்-பன்மை வெளி வெளியிடு
3. பெரியார் ஈவேரா சிந்தனைகள் –வே. ஆனைமுத்து.-பெரியார்-நாகம்மை கல்வி அறக்கட்டளை
4.தமிழகத்தில் பிற மொழியினர் –ம.பொ.சிவஞானம்- புலம் வெளியீடு
5.பெரியார்-தமிழ்-தமிழர்-தமிழ்நாடு –தொல்தமிழன்.-கரந்தை வெளியிடு
6. மார்க்சியம்,பெரியாரியம்,தேசியம்- எஸ்.வி.ராஜதுரை –விடியல் பதிப்பகம்
7. பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் -சுப.வீரபாண்டியன் -தமிழ் முழக்கம் வெளியீடு
8.பெரியாரும் பெருந்தலைவரும்- கோபண்ணா- நவ இந்தியா பதிப்பகம்
 -மணி.செந்தில்

தமிழன் தோன்றிய லெமுரியா- வரைபடத்துடன்.

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்

“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

என் அண்ணன் பாடல் – நெஞ்சுருக்கும் நல்லிசை.



.

காற்று குளிராய் வீசுகிறது. அனேகமாக மழை வரலாம். சன்னல் கதவுகள் வேகமாக படபடத்துக் கொண்டன. குளிர் காற்று அறைக்குள் வரட்டும் என கருதி சன்னல்களை திறந்து வைத்து கொக்கிகள் போட்டேன். அறையெங்கும் குளிர் பரவியது. கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்துப் பார்த்தேன். மீண்டும் அந்த பாடலை கேட்கலாம் போலிருந்தது. நேற்று அமெரிக்காவில் இருந்து அருமை நண்பர் பாக்யராசன் அந்த பாடலுக்கான சுட்டியை அனுப்பி அவசியம் நான் கேட்டாக வேண்டும் என்று பணித்தது முதல் இந்த நொடி வரை அந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன். பாடலை கேட்ட முதல் முறையில் அந்த பாடல் கண்ணனுக்கானது இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது. பாடலைக் கேட்கும் பலரும் இப்படித்தான் உணர்ந்துக் கொள்கிறார்கள்.

.

கண் கலங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆழமாக ஊடுருவி ஆறாத ரணமாய் சதா உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வலிக்கு தன் தமிழால் மயிலிறகு மருந்து தடவி இருக்கிறார் என் அறிவுமதி அண்ணன். இருட்டின் ஆழத்தில் கிடக்கும் விழிக்கு வெளிச்ச தெளிப்பொன்றை பற்ற வைத்து ஆறுதல் சொல்லும் சொற்களோடு .. வரும் சுதா ரகுநாதனின் குரல் நம்மை அசத்திப் போடுகிறது.


.

ஒரு மனிதனை தொழுது வணங்குதல் என்பது அறிவு நிலைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். பிம்பங்களினால் எழுப்பப்படும் உருவம் நிலையற்றதாக போகலாம். ஆனால் அவரை சந்தித்தவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவரைப் பற்றி..அவரோடு இருந்த கணங்கள் பற்றி கேட்டு மீண்டும் மீண்டும் சிலிர்ப்படைகிறேன். அவரது தோற்றம் என் முன்னால் விரிந்துக் கிடக்கிறது. என் படுக்கை அறையில் துவங்கி…. என் அலுவலக அறை வரை அவரது படங்களை ஆசையுடன் மாட்டி வைத்திருந்து என் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாய் அவரை எனக்குள் மாற்றி வைத்திருக்கிறேன். எதிரிகளால் கூட குறை கூற முடியாத அந்த மனிதனின் நேர்மையையும், ஒழுக்கத்தினையும் கண் கலங்க நினைவு கூர்கிறேன். நான் அந்த மனிதனை நினைக்காத நொடியில்லை. என் மகனை அவரின் படத்தினை காட்டி பெரியப்பா என அவனை அழைக்கச் சொல்லி பெருமைப் படுகிறேன். என் வீட்டின் சிறப்பு நிகழ்வுகளின் போது அவரது படத்திற்கு முன்னால் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொள்கிறேன். அண்ணனைப் பற்றி ஏதாவது தகவல் உண்டா என கண்கள் முழுக்க ஆர்வத்துடன் கேட்கும் தம்பிகளுக்கு அவர் இருக்கிறார். வருவார் என நம்பிக்கையாய் உண்மையை சொல்கிறேன். அவர் இல்லாத உலகத்தில் நான் வாழ முடியாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரைப்பற்றிய காணொளிகளை பார்க்கும் போது அவரது கண்களில் மிதக்கும் நம்பிக்கை மிகுந்த கனவுகளை யாராலும் களவாட முடியாது எனக்குள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். அவரைப் பற்றி அவதூறு பேசுபவர்களை..அவரை விமர்சிப்பவர்களை நான் வெறுப்பின் உச்சத்தில் தள்ளுகிறேன். உலகத்தின் அனைத்து தத்துவ சாரங்களிலும் அவரை நான் பொருத்திப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் தனியே போகப் பயப்படும் என் மகனிடம் பெரியப்பாவினை நினைத்துக் கொண்டே போடா என பெருமைப் பொங்க சொல்கிறேன். எம் இனத்திற்கான நாட்டை அழித்தவர்களையும், அழிக்க துணைப் போனவர்களையும் நான் ஆழ்ந்த வன்மத்துடன் பார்க்கிறேன். வீதிகளில் எப்போதாவது நெகிழி பதாகைகளில் நிற்கும் அவரது உருவத்தினை கண்கலங்க பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.என்னால் இப்படித்தான் வாழ முடியும் என தோன்றுகிறது. அண்ணன் வருவார் என்ற நம்பிக்கைதான் என்னை இயங்க வைக்கிறது. அவரின் சாகசங்களினை யாராவது பெருமைப் பொங்க பேசினாலோ, எழுதினாலோ நான் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவனாகிறேன்.

.

கண்களை மூடுங்கள் . விளக்குகளை அணையுங்கள். அசையாமல் இந்த பாடலை மென்மையாக உள்வாங்குங்கள். ஒற்றை புல்லாங்குழலோடு இதழ் இதழாய் விரியும் பாடலில் உங்கள் மனதை இழப்பீர்கள். சுதாவின் குரலில் ஒழுகும் உயிர் அறிவுமதி தமிழை பற்றி அப்படியே தேசியத் தலைவரை ஸ்தூலமாக நம் கண் முன்னால் நிறுத்திப் போடுகிறது.

“அவன் வருவான்; கண்ணில் மழை துடைப்பான்”

என குரல் உயரும் போது நாம் உடைகிறோம்.

“ பனி மூட்டம் மலையை மூடலாம், வழி கேட்டு பறவை வாடலாம்.”

என குரல் குழையும் போது இதுவரை இறுகிக் கிடந்த இதயத்தின் முடிச்சிகள் ஒன்றொன்றாய் அவிழ்ந்து இறகாகிறது.

.

இந்த பாடலும்..வரிகளும்..இசையும் ஓர் அனுபவம். இசைக்கு உயிர் உண்டு என்பதை மிக நெருக்கமாக உணர வைக்கும் தன்மை இப்பாடலுக்கு இருக்கிறது. எளிய சொற்களில் விரியும் இசை நம்மை ஆட்கொள்கிறது.

பாடலின் ஊடே தொக்கி நிற்கும் நம் தொன்மம் தந்த தாய்மையின் விரல்கள் நம்மை சாந்தப்படுத்துகிறது. கரைகிறோம். உருகுகிறோம். கரைந்து மிஞ்சிய கரைசலில் கண்ணீரின் உப்புத் துகள்கள் மிதக்கின்றன.

.

இந்த பாடல் படத்தின் எந்த சூழலுக்காக எழுதப்பட்டது என்ற இயக்குனரின் நோக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ..நாம் இந்தப் பாடலை அண்ணன் பாடலாகத் தான் உள்வாங்குகிறோம். அப்படித்தான் அதுவும் உள்ளே போகிறது. உயிரிசை வழங்கிய வித்யாசாகருக்கும்.. குரல் கொடுத்து அனுபவமாய் நம்முள் இறக்கிய சுதா ரகுநாதனுக்கும்., படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்.

.

அறிவுமதி அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை.

அவர் அப்படித்தான். நான் இப்படித்தான்.

நாங்கள் இவ்வாறாக.

.

என்ன குறையோ என்ன நிறையோ

திரைப்படம்: மந்திரப் புன்னகை

இசை : வித்யாசாகர்

என்ன குறையோ

என்ன நிறையோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன தவறோ

என்ன சரியோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன வினையோ

என்ன விடையோ

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

( என்ன குறையோ )

நன்றும் வரலாம்

தீதும் வரலாம்

நண்பன் போலே

கண்ணன் வருவான்

வலியும் வரலாம்

வாட்டம் வரலாம்

வருடும் விரலாய்

கண்ணன் வருவான்

நேர்க்கோடுவட்டம்

ஆகலாம்

நிழல் கூட

விட்டுப் போகலாம்

தாளாத துன்பம்

நேர்கையில்

தாயாக கண்ணன்

மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்

இருள் வழிகளிலே

புது ஒளி விதைப்பான்

அந்தக் கண்ணனை

அழகு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

உண்டு எனலாம்

இல்லை எனலாம்

இரண்டும் கேட்டு

கண்ணன் சிரிப்பான்

இணைந்தும் வரலாம்

பிரிந்தும் தரலாம்

உறவைப் போலே

கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை

மூடலாம்

வழி கேட்டு பறவை

வாடலாம்

புதிரான கேள்வி

யாவிலும்

விடையாக

கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்

எங்கும் நிறைந்திருப்பான்

அவன் இசை மழையாய்

உலகினை அணைப்பான்

அந்தக் கண்ணனை

கனிவு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

பாடலை பருக: http://www.raaga.com/a/?T0002515

Page 7 of 11

Powered by WordPress & Theme by Anders Norén