தோழர்களே…..

வணிக மயமாக மாறிப்போன நம் நாட்டின் திரைப்படத் துறையை மீட்டு எடுக்க வேண்டிய சூழலில் மாற்றுச் சிந்தனைகளை, திரைப்படங்கள் குறித்த நேர்மறையான எண்ணங்களை சமூகத் தளத்தில் உண்டாக்க திரைப்பட இயக்கங்களின் இயக்கம் நாளது தேதியில் அவசியமாக உள்ளது.

உலக சினிமாக்கள் நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இடம் பிடிக்க துவங்கி விட்ட இந்த சூழலில் திரைப்படம் என்ற அரிய பொருளை வெறும் பொழுதுபோக்கிற்கானது என்று உணரும் அபாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது..
மக்களை அசலாக பிரதிபலிக்கக் கூடிய திரைப் படங்களை காணுவதும்,அவை குறித்த எதிர்வினைகளை சமூகத் தளத்தில் ஆரோக்கிய சூழலில் ஏற்படுத்திட திரைப்பட இயக்கம் என்ற குழுவின் செயல்பாடு அவசியமானது.

குறும்படங்கள் ,மாற்று சிந்தனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படைப்பிற்கு துரோகம் இழைக்காமல் சித்தரிக்கின்ற படங்கள் ஆகியவைகளை முன்னிறுத்த வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.ஏதோ ஒரு வகையில் உண்மையான திரைமொழியை நிகழ்த்தத் துடிக்கும் படைப்பாளிகளை கெளரவப் படுத்துவதும் இதில் அடங்கும்.

இதைத் தான் என் தோழர்கள் கோவையில் நாய்வால் திரைப்பட இயக்கம் மூலம் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கோவையில் செயல்பட்டு வரும் நாய்வால் திரைப்பட இயக்கம் மாற்றுப் படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகியவை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சார்ந்து இயங்கும் படைப்பாளிகளை முன்னிலைப் படுத்தியும் வருகிறது….அத்தி பூத்தாற் போல் நல்ல திரைமொழியை உள்ளடக்கமாக கொண்டுவரும் திரைப்படங்கள் குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைத்து,அதன் படைப்பாளிகளை பாராட்டி வரும் நாய்வால் திரைப்பட இயக்கத்தின் பணி மகத்துவமானது.

தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில்வாணன் மற்றும் தோழர்கள் நடத்தி வரும் நாய்வால் திரைப் பட இயக்கம் நாளை கோவையில் நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது…நடிகர் சத்யராஜ்..,எழுத்தாளர் மணா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.தோழர்கள் ஜெயக்குமார், அன்பே மயில் வாணன் ஆகியோர் தன் தெளிந்த சிந்தனைத் திறத்தால், ஊக்கம் மிக்க செயல்பாட்டால் நாய்வால் திரைப்பட இயக்கத்தை மிளிரச் செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் புகழ்ப் பெற்ற எழுத்தாளுமை, நம் சகா..நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெருமைமிகு தோழமை ….தோழர் பாமரனின் சிறப்புரையும் உண்டு…
நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சக இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கம் தனது அளப்பரிய செயல்பாடுகளால் திரைப்படங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன் வைத்து வருகின்ற இந்த பெருமை மிகு சூழலில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் தனது சகோதர இயக்கமான நாய்வால் திரைப்பட இயக்கத்தை பெருமையுடன் பாராட்டுகிறது..

தோழர் யுவனின் அழைப்பும்,.தோழர் ஜெயக்குமாரின் அழைப்பும் என்னைப் பொறுத்தவரையில் விலை மதிக்க முடியாதவை….அவர்களை நோக்கி என் தவறுதலுக்கான வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
என் சார்பாக தோழர் யுவனின் பங்கேற்பும் ,செயல்பாடும் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்கண்ட விழாவில் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தோழர்.யுவன் பிரபாகரன்..,தம்பிகள் தமிழ்,நாசர் மற்றும் நம் உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் கோவை உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்… தம்பி இளவரசன் இறுதி நேரத்தில் எப்படியாவது சென்றுவிடுவதாக கூறியுள்ளான்.
தேர்வு வகுப்பு காரணமாய் என்னாலும் ,பணிப் பளு காரணமாய் தோழர் சசியாலும் கலந்துக் கொள்ள முடியவில்லை.. கடல் கடந்து இருக்கும் தோழர்கள் உமாசங்கர்,தயாள் ஆகியோரும் பணி காரணமாய் தலைநகரில் இருக்கும் தோழி விக்னெஷ்வரி..படப்பிடிப்பில் இருக்கும் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் ஆகியோரும் இதில் அடக்கம்.

இருந்தாலும் எம் நினைவுகள் விழா சிறக்க வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்கள்.

உலகத் தமிழ் மக்கள் அரங்கம்
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக…

மணி.செந்தில்குமார்