சேகுவேரா….ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,,

சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்
விற்று தீர்கின்றன… அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்…

சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்…
அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி…இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர வைக்கிறது.ஒரு மரணத்தின் மதிப்பு இவ்வளவு தானா…? என்று சிந்திக்க வைக்கிறது அவரது முகம்..ஓரு புரட்சிக்காரனின் பணியை வெகு நேர்த்தியாக செய்தார் சே.அவர் மரணத்தின் வாயிலில் நின்று சொன்ன வார்த்தை “நான் இன்னும் இந்த உலகத்திற்கு தேவைப்படுகிறேன்”

ஆமாம்..உண்மைதான் ..சே என்றும் தேவைப்படுகிறார்

(தொடரும்)