—————-

பொய்யர் சுபவீ அவர்களே..

திராவிடத்தை நீங்கள் விமர்சித்த பேச்சுக்கு மழுப்பல் விளக்கம் கொடுப்பதற்காக நீங்கள் வெளியிட்ட காணொளி யில் என்னையும், பாக்கியராசனையும் பற்றி மிக இழிவான நோக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுக்க பொய்யும் பித்தலாட்டங்களும் பிழைப்புத் தனமும் செய்வதையே முழு நேரப்பணியாக செய்துகொண்டு கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் உங்களோடு ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவன் என்ற முறையில் சில உண்மைகளை இந்த நேரத்தில் வெளியிட வேண்டி இருக்கிறது.

1. அதில் சுபவீ குறிப்பிட்டுள்ள உரையாடலை பேசிய வினோபா என்பவரே தான் பேசியது பொய்யென்று ஒத்துக்கொண்டு அவரது வழக்கறிஞர் மூலம் எங்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது போன்ற ஒரு பொய் செய்தியை அவதூறு பரப்பும் விதமாக சுபவீ கையாளுவது என்பது இது முதல் முறையல்ல.

2. அவருடன் நான் நெருங்கிப் பழகியவன். 2009-க்கு பிறகு இனத்துரோக திமுகவோடு நீங்கள் நின்றதால் நான் உங்களுக்கு” மணி செந்தில்” என்பவர் ஆனேன். ஒன்றாக இருந்த காலகட்டத்தில்.. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் அவரது குடும்பத்தினர் களைப் பற்றியும் இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் திராவிடத்தின் கேடுகளைப் பற்றியும் பலமுறை எங்களிடம் வெளிப்படையாக நீங்கள் பேசிய கருத்துக்கள் எங்கள் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் அன்று உங்களிடம் கற்றதை தான் இன்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

3. ஜெயா ஆட்சியில் பொடா சட்டத்தில் அடைக்கப்பட்ட பிறகே நீங்கள் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தீர்கள். சிறைவாசம் உங்களை அச்சுறுத்தியது.இனி தியாகம் செய்து பயனில்லை என்பதால் தான் ஆட்சி அதிகாரத்தின் பலன்களை அனுபவிக்க கருணாநிதியோடு கை கொடுத்தீர்கள். இந்த மண்ணில் தியாகத்திற்கு எந்த பலனும் இல்லை என்று நீங்கள் எங்களிடம் சொல்லிவிட்டு தான் வெறும் பிழைப்பிற்காக கருணாநிதியோடு சென்றீர்கள்.

4. உலகத்தமிழ் மக்கள் அரங்கம் ஆர்குட் இணையதள கூட்டத்திற்கு உங்களை அழைத்து வந்த காலங்களில் இதே திமுகவைப் பற்றி என்னிடம் நீங்கள் சொன்ன கருத்துக்களை இப்போது வெளியிட முடியுமா ‌.. போர் உச்சகட்டத்தில் இருந்தபோது ஈழ அழிவுகளை பற்றி அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் உங்கள் மூலம் தமிழ் உணர்வாளர்கள் விளக்க நேரம் கேட்டபோது கருணாநிதி நேரம் ஒதுக்க மறுத்து சந்திக்க மறுத்ததற்கு நீங்கள் கோபத்தோடு எங்களிடம் பகிர்ந்து கொண்ட அந்த சொல்லை இப்போது பொதுவெளியில் வெளியிட முடியுமா..??

4. உங்களோடு அன்று பயணித்த நான் உள்ளீட்ட பலர்இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் செஞ்சோற்றுக் கடனுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். 2009 மே மாத இறுதியில் போர் முடிவடையும் நாட்களில் தலைவர் உடலை போன்ற ஒன்றை ஊடகங்கள் வெளியிட்ட போது என்னைப் போன்ற உங்கள் ஆதரவாளர்களிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை இப்போது பேசி விட முடியுமா..??

6. நீங்கள் அந்தக் காணொளியில் குறிப்பிட்டிருக்கின்ற உரையாடலை பேசிய வினோபா என்பவர் தான் பேசியது ஆதாரங்கள் அற்ற பொய் என்பதை ஒத்துக் கொண்டு எங்களிடம் அவரது வழக்கறிஞர் மூலம் வருத்தம் தெரிவித்திருப்பதை நாங்கள் சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தும்,எங்கள் மீது மீண்டும் அந்த உரையாடலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்புவது மிக இழிவான செயல்.

இதுபோன்ற இழிவான செயல்கள் உங்களுக்கு பழக்கம் தான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறீர்கள்.கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து உங்களுக்கு மூட்டு இருப்பதையே மறந்தவர் நீங்கள். ஆனால் இதே கருணாநிதியைப் பற்றி நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள் என்பதற்கு நான் மட்டுமல்ல கவிஞர் தாமரை மட்டுமல்ல இன்னும் எண்ணற்றோர் சாட்சியாக உயிருடன் தான் இருக்கிறோம்.

அந்த உரையாடலில் எங்களுக்கு ஏதோ கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருவது போல நீங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறீர்கள்.

கடந்த 2009 இற்கு பிறகு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்த எனது வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்து இருக்கிறது என்பதனை என் வீடு வரைக்கும் வந்து என் வீட்டில் உணவருந்தி சென்றிருக்கிற நீங்கள் என் வீட்டிற்கு வந்து நேரடியாக பார்க்கலாம்.

அதே சமயத்தில் உங்களது வாழ்க்கைத் தரம் கருணாநிதி நட்பிற்கு பிறகு எவ்வாறு உயர்ந்திருக்கிறது என்பதை உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளலாம். மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்..

அதேபோல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் பாக்யராசனும் உங்களுக்கு தெரியாதவர் அல்ல. 2009 க்கு முந்தைய காலகட்டங்களில் அமெரிக்காவுக்கு வரும்போது உங்களை சீராட்டி பாராட்டி கொண்டாடிய அதே பாக்கியராசன் இன்றும் அதே வாழ்க்கை தரத்தில் தான் வாழ்ந்துவருகிறார்.

ஆனால் எந்த வேலைக்கும் செல்லாமல் நீங்கள் வாழும் வாழ்க்கைத் தரம் என்பது எப்படி கிடைக்கிறது என்று உங்களைப் போல நாங்களும் கேள்வி கேட்க விரும்பவில்லை.

இனத்திற்காக அனைத்தையும் இழந்து உழைக்கின்ற இளைஞர்களை பொய்யான அவதூறுகளை கொண்டு வீழ்த்த முடியும் என நினைக்கின்ற உங்களை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

பெரியாரிய இயக்க மேடைகளில்களில் சீமான் பேசியதை எல்லாம் துண்டு துண்டாக வெட்டி பரப்பியபோது மகிழ்ந்திருந்த நீங்கள்.. உங்களைப் பற்றி ஒரு சிறிய காணொளி வந்தவுடனேயே எங்களை ஏசி அவதூறு பரப்புகிறீர்கள். பரிதாபம்.

அண்ணன் சீமான் அவர்கள் வீரத்தமிழர் முன்னணி தொடங்கிய போது நீங்கள் கருஞ்சட்டைத் தமிழரில் அதை காலப்போக்கில் அவர் அடைந்த அரசியல் மாற்றம் என்று கொள்ளாமல் முன்பின் மாற்றிப் பேசுகிறார் சீமான் என்று அவதூறு பேசியவர் நீங்கள்.

பிழைப்பு வாதம் என்றால் அகராதியில் சுபவீ என்று மாற்றப்பட்டு விட்டது என்று உங்களோடு பயணித்தவர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.

இன அழிவின் போது கூட கருணாநிதி காலை பிடித்துக்கொண்டு கம்முனு இருந்த நீங்கள்.. இப்போது ஸ்டாலினுக்காக உதயநிதிக்காக இன்பாவிற்காக தொன்று தொட்டு வரும் கருணாநிதியின் குடும்பத்திற்காக எங்களையெல்லாம் பற்றி அவதூறு பரப்ப தொடங்கி இருப்பது என்பது கேவலத்திலும் கேவலம் கொடும் கேவலம்.

செய்து விட்டுப் போங்கள்.

உணர்ந்து கொள்ள முடிகிறது.

உங்களுக்கும் பசிக்கும் இல்லையா ..சுப.வீ..??