அலைவரிசை
தவறிய
உன்
தடுமாற்ற சொற்களுக்கு
மத்தியில்..

உனது மெளனம்
ஒன்று சின்னதாய்
பூத்துவிடுகிறது.

அந்த மெளனத்தின்
ஆழத்தில் தான்
எனது
மீளெழும்பலுக்கான
பாடலை நான்
கண்டடைய வேண்டும்.

புராதன காதலுணர்வின்
ஆதித்துயராக
அந்த மெளனத்தை
நான் நம்புகிறேன்.

அது அதுவாக
கலைவதற்குள்..

அல்லது நீயே
அதை
கலைப்பதற்குள்..

இப்போதே நீ போகலாம்.

மணி செந்தில்.