திரும்பிப் பார்த்தால்
எதுவும் இல்லை.

நினைவில் கொள்ளவும்..
நினைவில் வைத்துக் கொல்லவும்..
ஏதேனும் ஞாபகங்களின்
நிழல் துரத்தி வரவில்லை.

மகுடங்களின் போதைகளும்
சாபங்களின் சாயைகளும்
நீக்கிப் பார்த்தால்
வாழ்வென்ற சாலை
வெறிச்சோடித்தான்
கிடக்கிறது.

ஒரு துளி
விஷத்தால்
உயிர்பித்ததும்..
ஒரு துளி
கண்ணீரால்
மரணித்ததும்..
தாண்டி
யோசித்துப்
பார்க்க
எதுவுமில்லை.

காதலிகளால்
கவிதைகள்
என்றானதும்.‌..
கவிதைகளால்
காதலிகள்
உண்டானதும்..
தவிர
இங்கே
கிறுக்கிக் கொள்ளவும்
கிறுக்குக் கொள்ளவும்
எதுவுமில்லை.

சத்தியமாக
சொல்வதெனில்
இந்த காலி
கோப்பைக்கு
முன்னால்
நானும் காலியாகத்தான்
இருக்கிறேன்.

உண்மைதான்..
இக்கணத்தில்
என்னில்
நிரப்பிக் கொள்ளவும்
நிறைந்து நிற்கவும்
எதுவுமே
இல்லை.