எங்களை மதவாதிகளுக்கு பிடிக்காது..ஏனெனில் நாங்கள் இனவாதிகள்.
எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது அவர்களின் அரசியலை சாகடிக்க. ..முற்போக்காளர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு அருகில் ..நாங்கள் நிற்கிறோம். இந்தியர்கள் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். ஏனெனில் இந்நாடு இந்தியா, தமிழ்நாடு என பிரிந்தே கிடக்கிறது. என்கிறோம். ஏற்கனவே இருந்த தமிழ்த்தேசியர்கள் எம்மை தேர்தல் பாதையில் செல்லும் பிழைப்பாளர்கள் என பிழை பேசுகிறார்கள்.ஏனெனில் தமிழ்த்தேசியம் அவர்களால் வெல்லமுடியாத தேர்தலிலும் வெல்லும்..அதிகாரத்தை அள்ளும்.. என நிற்கிறோம். திராவிடவாதிகள் எங்களை எதிரி என்கிறார்கள்.ஏனெனில் எம் இனத்தின் எதிரிதான் திராவிடவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்கிறார்கள். விமர்சிக்கவே அவர்தான் கற்றுத்தந்தார் என்கிறோம்.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.எம் இனத்திற்கு என்று ஒரு நாடு அடைவதை விட உன்னத அரசியல் உலகில் இல்லை என்கிறோம். விடுதலைப்புலிகளை மற்றவர்கள் ஆதரித்தார்கள். நாங்கள் தரித்தோம். பிரபாகரனை தலைவர் என்றார்கள். நாங்கள் எம் அண்ணன் என்றோம். காங்கிரசை மற்றவர்கள் எதிர்த்தார்கள். நாங்கள் எரித்தோம்…கருணாநிதி சொல்லிதான் கட்சி ஆரம்பித்தார்கள் என்றார்கள்.பின்னர் கட்சி ஆரம்பித்ததே கருணாநிதியை எதிர்க்கத்தான் என்றார்கள். ஜெயலலிதா ஆதரவில் இருக்கிறார்கள் என்றார்கள். ஜெ எதிரி கருணாநிதிக்கு கிடைக்கும் கூட்ட அனுமதி கூட எமக்கில்லை என்ற போது நழுவினார்கள். தாதுமணல் கொள்ளையை ஆதரிக்கிறார்கள் என்று கார்ட்டூன் வரைந்தார்கள். தாதுமணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி நாங்கள் தானே என்று கேட்டால் கார்ட்டூன் வரையும் கரங்களுக்கு கண்கள் இல்லை என்கிறார்கள். இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என அலறினார்கள் . மோடிக்கு பீடி பற்ற வைப்பவர்களை கேட்காமல் யாசின் மாலிக்கை தமிழ் மண்ணிற்கு அழைந்த வந்தவர்களை ஏன் அவதூறுகிறீர்கள் என்று கேட்டால் புத்தகம் போட்டவரில் இருந்து புண்(ஆகும் வரை )ணா (நா)க்கு விற்றவர் வரை மெளனித்தார்களே,,ஒழிய..உண்மையை உரைக்க ,பாராட்ட ஒருவரில்லை. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார்கள் என உறுமுகிறார்கள். இனம் வென்றாக அனைவரை ஒன்றாக்க வேண்டும் என்கிறோம். முரண்களை களையாமல் இணையமுடியாது என இறுமுகிறார்கள். இணைந்தால் முரண் களையும் என முழங்குகிறோம். # விமர்சிக்கப்படுவதிலும்..உற்று நோக்கப்படுவதிவதிலும்..எதிர்க்கப்படுவதிலும் தான் உணர முடிகிறது எமது வலிமையையும்.. அவர்களது வலியையும். நாம் தமிழர்,